தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 17, 2013

ஒரு பொன் மாலைப் பொழுதும்............... கதையின் இன்னொரு முடிவும்!

 ”ஒரு பொன் மாலைப்பொழுதும்,கதையின் ஒரு முடிவும்” என்ற  சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் வாசு அவர்கள் ஒரு முடிவு எழுதியிருக்கிறார்கள்.பின்னூட்டத்தில் எழுதப் பட்டதால் பலரைச் சென்றடைய வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.எனவே அவரது முடிவை இஙே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
----------------------------------------

வீடு திரும்பிய பின் வெகு நேரம் மனம் மாலை நடந்தவற்றை அசை போட்டு கொண்டே இருந்தது. மனம் ஒரு குரங்கு அல்லவா ! வயது ஆனாலும் ( உடலுக்கு) மனம் அந்த பெண்ணின் அழகை பேசி சிரித்த பாங்கினை எண்ணி எண்ணி அசை போட்டு கொண்டே இருந்தது .அடுத்த நாள் நிச்சயமாக கடற்கரை சென்று மூலிகை டீ சுவைத்து விட வேண்டும் ( இலவசமாக இல்லா விட்டாலும் !) என்று முடிவு செய்து கொண்டேன் . அந்த எண்ணமே சுவையாக இருந்தது !


அந்த நேரம் கைபேசி மணி ஒலித்தது ..அந்த பெண் தான் ... " இது நினைவூட்டு தொடர்பு .. நாளை நிச்சயமாக வருவீர்கள் அல்லவா,.."என மயக்கும் குரலில் கேட்க மது உண்ட மந்தி போல் மயங்கி : உறுதியாக என்று ஆங்கிலத்தில் மந்தகசமாக கூறினேன் , அவளே மீண்டும் எவ்வளவு அதிகமாக மக்கள் வருகிறார்களோ அவ்வளவு எனக்கு ஊக்க தொகை கிடைக்கும் என்று கூறினால் . கவலை வேண்டாம் உறுதியாக வருகிறேன் என்று மீண்டும் கூறினேன் . அடுத்த நாளுக்காக காத்திருந்தேன் .. இரவும் வந்தது ..இரக்கமில்லா இரவு இருதயத்தை இறுக்கியது ...இரவு சுருங்காதா ...


மீண்டும் ஒரு மணியோசை ..இம்முறை ஒரு பத்திரிகை நண்பனிடம் இருந்து ...ஒரு செய்தி ... ஒரு பெண்ணும் ஆணும் போலீசிடம் சிக்கிய தகவல் ..அவர்கள் கையில் மூலிகை தேனீர் குறித்து விளம்பர ஏடுகள் முதலியவை பறிமுதல் செய்ய பட்டனவாம் திடுக்கிட்டு மேற் கொண்டு தகவல் கேட்டேன்


தகாத தொழில் செய்யும் கும்பலாம் ..அவர்கள் கையில் ஒரு புகைப்பட கருவியும் இருந்ததாம் . மீதி தகவலை காலை கூறுவதாக கூறி தொடர்பினை துண்டித்தான் .கேட்டவுடன் மனதை கிலி பற்றியது ..என்னையும் அல்லவா படம் எடுத்தார்கள் ..ஐயோ படம் பிடி பட்டால் ....எண்ணவே மனம் பதறியது ..மயக்கம் கலைந்தது . வாசலுக்கு ஓடினேன் வினை தீர்க்கும் என் அப்பன் முன் நின்று கண நேர சபலத்திற்கு மனம் அடிமை ஆனதை நினைத்து
வருந்தி நின்றேன் ...வரும் பிரச்சினை எண்ணி உள்ளம் அழுதது ..இம்முறை என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடப்பா என்று உள்ளம் உருகி வேண்டிக்கொண்டேன் ..
மறு நாள் விடிய கூடாது என்று இம்முறை மனம் எண்ணியது ..யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே உதய சூரியன்.


கனத்த உள்ளதுடன் வேண்ட வெறுப்புடன் எழுந்து தொலை பேசி ஒலிக்காக காத்திருந்தேன் .ஒவ்வொரு கணமும் சித்திரவதை தான் . தொலை பேசி சரியாக உள்ளதா என்று மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டே இருந்தேன்


இப்போது மூலிகை தேநீர் மறந்து விட்டது எப்பிடி இவ்வாறு நடந்து கொண்டோம் என்று எண்ணி நாணினேன் ..ஐயோ நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்று நினைக்க துவங்கினேன் ....ஒரு ஓரத்தில் மனம் ஒலிக்காத தொலை பேசியை எண்ணி எண்ணி பயந்தேன் ....நானே கூட நண்பனை அழைக்கலாமா என்று ஒரு கணம் எண்ணினேன் ,,துணிவு வர வில்லை ....


அப்போது திடீரென்று ஒழி எழும்பியது ....ஓடினேன் தொலைபேசி அருகே ..நடுக்கத்துடன் " எஸ் " என்றேன் ..." இது .... வங்கி உங்களுக்கு கடன் அட்டை வேண்டுமா " என்று மீண்டும் ஒரு இனிய குரல் ..சீசீ என்ன சபலம் மீண்டும் ..


தேவை இல்லை என்று துண்டித்து விட்டேன் ///


சிறுது நேரம் சென்று மீண்டும் ஒலி.. மீண்டும் துடுப்புடன் எடுத்தேன் .. இது அடையார்
ஆனந்த பவனா என்று மறு புறம் குரல் . எரிச்சலுடன் பதில் கூறாமல் தொடர்பை துண்டித்தேன் ..


கடைசியில்  எதிர்பார்த்த நண்பன் .. அவனுக்கு காவல் துறையில் சிறுது செல்வாக்கு உண்டு . என்னை அழைத்தான் காவல் நிலையத்திற்கு ..கதி கலங்கி போனேன் ..என் புகை படமும் அங்கு இருக்குமோ... தயங்கி தயங்கி சென்றேன் ..காவல் அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான் ..வங்கியில் உயர்ந்த பதவி வகித்த காரணத்தினால் நல்ல உபசாரம் ..புயலுக்கு முன்பு அமைதியா .. மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது ..


 பிறகு மெதுவாக என் நண்பன் பேச தொடங்கினான் . அது சரியான ஏமாற்று கும்பல் ..படம் எடுப்பது போல் நடித்து ஒரு குழப்பத்தை உண்டாக்கி மறு நாள் கடற்கரை ஓரம் வரவழைத்து தங்கள் சாகசத்தை காட்டி ஏமாற்றி பணம் பறிப்பதே தொழிலாக கொண்டவர்கள் ...என்ன என்னை என்னால் நம்ப முடியவில்ல .." அiப்போது அக்கருவியில் ஒரு படமும் இல்லையா என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டேன் ..இல்லவே இல்லை என்று நண்பன் கூறியதும் " மலை போல் வரும் சோதனை எல்லாம் பனி போல் நீங்கி விடும் " என்ற பாட்டு நினைவிற்கு வந்தது .. வினை தீர்க்கும் விநாயகன் முகம் என் கண் முன் வந்தது . .. கன்னத்தில் போட்டு கொண்டேன் அங்கேயே . வியப்புடன் என்னை பார்த்தார்கள் நண்பனும் காவல் அதிகாரியும் ..ஓடினேன் வீட்டிற்கு ..மீண்டும் விநாயகன் முன் நின்று நன்றி செலுத்தினேன் ..வீட்டிற்குள் நுழைந்தேன் .திடீரென்று அப்பெண் அன்பளிப்பாக தந்த அப்பெட்டிth நினைவிற்கு வந்தது ..திறந்து பார்த்த நான் திகைத்தேன் .......( என்ன இருந்தது என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள் )

------------------------------------------------

முதல் பதிவின் பின்னூட்டத்தில் கற்பனைக்குதிரையைத் தட்டி விடுவதாக கூறியவர்கள்


ஸ்கூல் பையன்,வே நடனசபாபதி,s.suresh,சங்கவி,ரூபக் ராம்  ஆகியோர்  வே நடனசபாபதி அவர்கள் எழுதி விட்டார். மற்றவர்களின்முடிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!



6 கருத்துகள்:

  1. அந்த பெட்டியில் என்ன இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க தூண்டியுள்ள நண்பர் வாசு அவர்கள், கோவையில் சில காலம் வாசித்ததால் தானும் ஒரு ‘இராஜேஷ்குமார்’ என்பதை நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள் அவருக்கு. அவரின் எழுத்துக்களை இனியாவது அவரின் வலைப்பதிவில் எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  2. இப்படியெல்லாம் எழுதணுமா... கொஞ்சம் சிக்கல் தான்... இரவுப் பணி முடித்து முயற்சி செய்யறேன்

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ஒன்றும் புரியவில்லை!நானொரு மண்டு! மன்னிக்க!

    பதிலளிநீக்கு