தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 09, 2016

ஓடிப் போனவள்!



ஓடிப் போனவளே நான் ஒன்னைத்

தேடித் தேடி அலுத்துப்போனேன்!

பாக்காத நேரத்தில் பாவி மக 

பரிதவிக்க விட்டுப் போனாயே!

என்ன கொறை வச்சேன் ஒனக்கு

என்னை ஏன் விட்டுப் போனேடி?

சோசியமும் பாத்தாச்சு,ஆத்தா

அருள் வாக்கும் கேட்டாச்சு

எதுவுமே பலிக்கலியே இன்னும் நீ

இருக்கும் எடமும் தெரியலியே

வேலைக்கும் போகலியே 

வீட்டில் எல்லாம் குவிஞ்சிடுச்சே

சுணக்கம் இல்லாம வா,துணியெல்லாம் 

சுமக்க   வேறென்ன செய்வேன்?!


(ஒரு கிராமத்து சலவைத் தொழிலாளி காணாமல் போன கழுதையை எண்ணிப் புலம்புகிறார்)

34 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹா நான் வேற மா3 நினைச்சுட்டேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த இழப்பும் சோகம்தானே ஜீ!
      மின்னல் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. சலவைத் தொழிலாளிக்கு ஓடிப்போன பெண் (கழுதை) மேல் உள்ள பாசம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. :) பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் நீதி:

      கட்டியவளோ, கழுதையோ நம்முடன் கூடவே இருக்கும் வரை அவளின் அருமையும், பெருமையும், உபயோகமும் நமக்குத் தெரியவே தெரியாது என்பதாக இருக்குமோ?

      நீக்கு
    2. அதே அதே!ஆகா! வைகோ சாருக்கு ஒரு பெரிய நன்றி;நான் நீதியின்றிக் கதை எழுதுவதில்லை என்பதை உணர்த்தியதற்கு!
      உண்மை அதுதானே வைகோ சார்!

      நீக்கு
  3. இதுக்கே இப்படின்னா ,பெண்டாட்டி போனா இன்னும் எப்படி புலம்புவாரோ :)

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அவசியமான நேரத்தில் இழந்த பொருளின் அருமை தெரியும் என்பதனை யதார்த்தமாய் வண்ணானின் குரலாய் ஒலித்திருக்கின்றீர்கள்! அழகிய எளிய நடையில்.... அருமை! அருமை அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் ஒரு விளக்கமா!சூப்பர்
      நன்றி கிருஷ்ணரவி

      நீக்கு
  5. கொஞ்ச நேரத்தில் அதிர வைத்து விட்டீர்களே,,,
    நல்ல வேளை அது கழுதையானது
    இருந்தாலும் பாவம் தொழிலாளி,,,

    சிறப்பூ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செந்தழல் சேதுபதி
      (முன்பு செந்தழல் ரவி என்ரு ஒரு பிரபல பதிவர் இருந்தார்.இப்போதேல்லாம் எழுதக் காணோம்)

      நீக்கு
  6. எப்படியோ நன்றாக “பல்பு” வியாபாரம் செய்வதில் சமர்த்தர் ஆகிவிட்டீர்கள்.

    என்னைப் போன்றவர்கள்தான் பல்பு பல்பாக வாங்கி எங்கே வைப்பதெனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

    ஹ ஹ ஹா

    வித்தியாசமான பார்வை ஐயா.

    ( தங்கள் பதிவிற்கு வந்தாலும் கருத்திட்டு போகாமல் இருந்திருக்கிறேன். மன்னியுங்கள் )

    இனி வருகையைப் பதிவு செய்து போகவேனும் முயல்வேன்.

    தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பல நாட்கள் பல பதிவுகளை விட்டு விடுகிறேன்!
      நன்றி ஐயா
      புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்

      நீக்கு
  7. ஓடிப்போனவளை படித்து ஏமாந்தேன்.
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. சலவைத்தொழிலாளியின் புலம்பலை தங்கள் நடையில் இரசித்தேன். கவிதையின் இறுதியில் அது ஒரு சலவைத் தொழிலாளி ஓடிப்போன அவரது கழுதையை எண்ணி புலம்பியது என சொல்லாமல் விட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லாமல் விட்டால் சுவையின்றிப் போயிருக்கும்!
      நன்றி சார்

      நீக்கு
  9. ஹாஹா..... ஓடிப்போனது கழுதையா! :)

    ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  10. கஷ்டம்தான்!

    வைகோ ஸார் சொல்லி இருக்கும் நீதியையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. இதற்குத்தான் கால்கட்டுப்போடணும் என்பது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதற்குத்தான் கால்கட்டுப்போடணும் என்பது...!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது சூப்பர் பஞ்ச் !! :)

      நீக்கு
    2. வைகோ சார் சொன்னதுக்குப் பின் நான் என்ன சொல்ல!
      சூப்பர்
      நன்றிம்மா

      நீக்கு
  12. அடா! அடா! அடா! இதைவிட வேறு எப்படியும் பாட்டு பாட முடியாது அந்த சலவைத்தொழிலாளியாலே! அசத்திட்டீங்க! நிறைய பேருக்கு பல்பு கொடுத்து!

    பதிலளிநீக்கு
  13. ஹஹஹஹஹ ...அந்தக் கடைசி வரிகளின் முன் துணியெல்லாம் சுமக்க என்று வந்ததும்...ட்ராக் மாறுதே கழுதையோ என்று நினைத்து வந்தால் அதே....செம ரொமப் ரசித்தோம் சார்..

    பதிலளிநீக்கு
  14. அருமை ஐயா
    தலைப்பை வச்சு கொஞ்ச நேரம் யோசிச்சி பார்த்தேன் என்னவோ இருக்கும்னு. கண்டு பிடிக்க முடியல.படிச்சதும் தான் புரிந்து. ஐயா!சுவாரசியத் தலைப்பு கொடுப்பதில் உங்களை மிஞ்ச முடியாது

    பதிலளிநீக்கு
  15. ஹா...ஹா...உதைக்காமல் ஓடிப்போனாளே என சந்தோசப்பட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க!
      ரொம்ப நாளாக் காணோமே?நலந்தானே?
      நன்றி

      நீக்கு