தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ஒன்றிலிருந்து ஒன்று!

என் நண்பர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் விழித்திரையில் பிரச்சினை எற்பட்டு லேசர் சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் படுக்கை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டார்.அவர் ஒரு நீரிழிவு நோயாளி.இருபது நாட்களுக்குப் பின் இன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை வீட்டிலேயே சோதித்துப் பார்த்தபோது 350 இருப்பதாக எனக்கு தொலைபேசி மூலம் கவலையுடன் சொன்னார்.காரணம் என்னவாக இருக்கும் என் நான் வினவ அவர் 20 நாட்களாக நடைப் பயிற்சி செய்யாததுதான் காரணமாக இருக்கும் என்றார். மருத்துவர்கள் எல்லாம் 'வாக்' போவதை வலியுறுத்துவது எவ்வளவு சரி என்பது புரிகிறது. நானும் வழக்கமாக நடைப் பயிற்சி செய்கிறேன்.

ஒரு மனிதன் முகம் போல் மற்றவர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வித்தியாசப் படுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்; கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு; முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப்படை யாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.

மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.பொதுவாக நடிகர்கள் ஏற்ற பாத்திரத்துக்கேற்ப ஒப்பனை,உடை,முக பாவங்களை மாற்றுவார்கள்.ஆனால் பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.

ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்).வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?முன்பெல்லாம் இழவு வீட்டுக்குச் செல்லும் பெண்கள் சத்தம் போட்டு ஒப்பாரி வைப்பார்கள்-எந்த சோகமும் இல்லாமல். -"சாந்திடும் நெற்றில சகதி அடிச்சாச்சே,பொட்டிடும் நெற்றிலே புழுதி அடிச்சாச்சே" என்பது போல.என் பாட்டி ஒருவர் இதில் கை தேர்ந்தவர்.ஒருமுறை ஒரு இழவு வீட்டுக்குச் செல்லும்போது என்னவெல்லாம் பாட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு போய் அங்கு போய் அனைத்தையும் மறந்து 'பக்' எனச் சிரித்துவிட்டாராம்.காமிரா முன் வந்து வசனத்தை மறந்த நடிகன் போல்.

ஒப்பாரி என்றவுடன் ஒரு நினைவு.தமிழில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த என் சித்தி ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு"தமிழர் வாழ்வில் தாலாட்டும், ஒப்பாரியும்"!இதற்காகக் கிராமம்,கிராமமாய்ச் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து,'டேப் ரிகார்டரில் 'அவர்கள் பாடும் தாலாட்டு/ஒப்பாரியைப் பதிவு செய்து தமிழர் வாழ்வோடு இணைந்த அந்தக் கலையை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சித்தி என்றால் என் தாயாரின் தங்கை.அப்பாவின் தம்பியின் மனைவியும் சித்திதான்.இன்னொரு விதமான சித்தியும் உண்டு.பொதுவாகவே இந்த சித்தி கதைகளிலும், நாடகங்களிலும் கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப் படுகிறார்.ஒரு குழந்தையின் தாய் இறந்தபின் அத்தந்தை மறுமணம் செய்துகொண்டால் வரும் புதிய உறவே இந்த சித்தி.ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் சித்தி மிக நல்லவராகக் காட்டப்பட்டார்.அதுதான் கே.எஸ்.ஜி.அவர்களின் 'சித்தி' திரைப்படம்.நிறைய பாராட்டு பெற்ற திரைப் படம்.தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில்,ஜெயகாந்தன் அவர்கள் முன்பு குறிப்பிட்டார்"என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.

ஜெயகாந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப்பட்டார்.'ஜெய பேரிகை' என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தபோது ஒரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் தாக்கப் பட்டபோது அவர் எழுதிய வரிகள்- "நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டி பிணம் தின்னும் கழுகுக் கூட்டமே"இது அன்றைய தி.மு.க.அரசு பற்றி அவர் எழுதியது.இன்று அந்த ஜெயகாந்தன் எங்கே ?! எல்லாம் காலத்தின் கட்டாயம்..

ஆம்.காலம் செல்லச் செல்ல எத்தனையோ விஷயங்கள் மாறி விடுகின்றன.வயது ஏற ஏறப் புதுப் புது நோய்கள் வந்து விடுகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நிறைய இனிப்புகள் சாப்பிட்டு வந்தேன்.ஆனால் இப்போதோ? ஆரம்ப சர்க்கரை நோயாளியாகி விட்டேன்.இனிப்புகளை மறக்க வேண்டியதாகி விட்டது.(அதுக்காக முழுசா விட்டுவிட முடியுமா?)மருத்துவர் அறிவுரைப் படி தினமும் நடைப் பயிற்சி செய்கிறேன்.அப்படிப் போகும்போது நடை பயிலும் மற்றவர்களைப் பார்க்கிறேன்.சிவாஜி-நடிப்பு-ஒப்பாரி-சித்தி-ஜெயகாந்தன்-காலம்-இனிப்பு-சர்க்கரை நோய்-நடைப் பயிற்சி-மற்றவர் நடை-சிவாஜி-நடிப்பு......................

58 கருத்துகள்:

  1. சிவாஜி கணேசன் நடை என்றதும் எனக்கு ஓன்று நியாபகத்துக்கு வருகிறது....தெய்வ மகன் படத்தில் ஊதாரி இளைஞராக வருவாரே ...மிகவும் நகைச்சுவையாக இருக்கும் !சுவையான பதிவு அண்ணாச்சி!

    பதிலளிநீக்கு
  2. நீளமா கமென்ட் எழுதி வடைய தொலைச்சிட்டேனே..........

    பதிலளிநீக்கு
  3. எங்கயோ போட்டிங்கள் ஐயா ஆனாலும் திரும்பி வந்துட்டிங்கள்.))

    பதிலளிநீக்கு
  4. கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  5. இப்போ ஷா ருக் கான் கூட அந்த மாதிரி நடையில் வித்தியாசம் காட்டுவார் ... ஐயா ஆனா நம்ம சிவாஜி தான்

    பதிலளிநீக்கு
  6. ஐயா நடக்க போகும் போது சைட் அடிக்குறீங்க ..enjoy da day

    பதிலளிநீக்கு
  7. பல புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன் ஐயா மிக மிக நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  8. ஐயா நானு் சக்கரை நோய் உள்ளவன்
    நடைப் பயிற்சி செய்கிறேன் ஆனால்
    சிலர் நாயோடு வருகிறார்கள் பயமாக
    உள்ளது
    என்ன செய்வது
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. துணுக்கு தோரணங்கள்...... இறுதியில், அத்தனையும் ஒன்றாய் இணைத்த எழுத்து "நடை" ..... அசத்தல்.

    பதிலளிநீக்கு
  10. உள்ளேன் ஐயா !!!!!! ஆஜரயிட்டேன், ஆப்சென்ட் போட்ராதீங்க,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  11. //மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.//

    சிங்கத்தின் நடையல்லவா அது?..மன்னவன் வந்தானடி பாடலின் ஆரம்ப நடையை மறக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  12. சிவாஜி நடையைப்பற்றி சொன்ன போது எனக்கு கந்தன் கருணை வெற்றி வேல் வீர வேல்... அந்த நடை தான் ஞாபகத்திற்கு வருகிறது ... நன்றி

    பதிலளிநீக்கு
  13. நடைப்பயிற்சி பற்றி எழுத ஆரம்பித்து அநேக விஷயங்களை சொல்லிவிட்டுதிரும்பவும் நடைப்பயிற்சிக்கே வந்தது, நடைப்பயிற்சி செய்வோர் வீட்டில் இருந்து கிளம்பி, நடக்கும்போது நண்பர்களோடு பல் வேறு விஷயங்களை பேசிவிட்டு திரும்ப வீட்டுக்கு வருவதுபோல் இருந்தது.சுவைபட சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. ஜொலி ஜொலித்திடும் எழுத்து நடை.

    பதிலளிநீக்கு
  15. ஒரு பதிவில்,
    நடை பற்றியும்,
    ஒப்பாரி பற்றியும்.
    சித்தி உறவு முறைக்கான விளக்கம் பற்றியும்
    அதன் இன்றைய சீரியல் தொல்லை பற்றியும்,
    அழகாக விளக்கியிருக்கிறீங்க.ரசித்தேன் ஐயா.

    வாழ்க்கை என்றால்....வேதனையுடன் நகர வேண்டுமா எனும் விரக்தி தான் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  16. சார் மிக வித்தியாசமான, கடினமான முயற்சி. வெற்றி பெற்று விட்டீர்கள். அருமை. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?

    பதிலளிநீக்கு
  17. ஜிலேபி! சிவாஜி!னு எல்லாம் சொல்லிட்டு கடைசில சிவாஜி வாயிலே ஜிலேபி!னு முடிச்ச விதம் அருமை! :))

    பதிலளிநீக்கு
  18. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //முதல் ரசிகன்...//
    முதல் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. koodal bala கூறியது...

    //சிவாஜி கணேசன் நடை என்றதும் எனக்கு ஓன்று நியாபகத்துக்கு வருகிறது....தெய்வ மகன் படத்தில் ஊதாரி இளைஞராக வருவாரே ...மிகவும் நகைச்சுவையாக இருக்கும் !//
    ஆகா
    //சுவையான பதிவு அண்ணாச்சி!//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  20. கந்தசாமி. கூறியது...

    //எங்கயோ போட்டிங்கள் ஐயா ஆனாலும் திரும்பி வந்துட்டிங்கள்.))//
    வந்துட்டேன் இல்ல!
    நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  21. மைந்தன் சிவா கூறியது...

    //கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க பாஸ்!//
    :) நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  22. ரியாஸ் அஹமது கூறியது...

    //இப்போ ஷா ருக் கான் கூட அந்த மாதிரி நடையில் வித்தியாசம் காட்டுவார் ... ஐயா ஆனா நம்ம சிவாஜி தான்//
    ஒரு சிவாஜிதான் இருக்க முடியும்!
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  23. ரியாஸ் அஹமது கூறியது...

    //ஐயா நடக்க போகும் போது சைட் அடிக்குறீங்க ..enjoy da day//
    குதிரைக்குப் போடுவது போல் கண்ணுக்கு மறைப்பு மாட்டிக்கொண்டு போகவா முடியும்?!:)

    பதிலளிநீக்கு
  24. ரியாஸ் அஹமது கூறியது...

    //பல புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன் ஐயா மிக மிக நல்ல பதிவு//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  25. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // ஐயா நானு் சக்கரை நோய் உள்ளவன்
    நடைப் பயிற்சி செய்கிறேன் ஆனால்
    சிலர் நாயோடு வருகிறார்கள் பயமாக
    உள்ளது
    என்ன செய்வது //
    நாயைப் பார்த்துப் பயமா,நாயுடன் வருபவர்களைப் பார்த்துப் பயமா ஐயா?!கையில் ஒரு கைத்தடி வைத்துக் கொள்ளுங்களேன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  26. Chitra கூறியது...

    //துணுக்கு தோரணங்கள்...... இறுதியில், அத்தனையும் ஒன்றாய் இணைத்த எழுத்து "நடை" ..... அசத்தல்.//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  27. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

    // உள்ளேன் ஐயா !!!!!! ஆஜரயிட்டேன், ஆப்சென்ட் போட்ராதீங்க,,,,,,,,,,,//
    பதியப்பட்டது!
    நன்றி கார்த்தி.

    பதிலளிநீக்கு
  28. செங்கோவி கூறியது...

    //மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.//

    //சிங்கத்தின் நடையல்லவா அது?..மன்னவன் வந்தானடி பாடலின் ஆரம்ப நடையை மறக்க முடியுமா?//
    அருமையாகச் சொன்னீர்கள். சிவாஜி சிவாஜிதான்!
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  29. மாய உலகம் கூறியது...

    //சிவாஜி நடையைப்பற்றி சொன்ன போது எனக்கு கந்தன் கருணை வெற்றி வேல் வீர வேல்... அந்த நடை தான் ஞாபகத்திற்கு வருகிறது ... நன்றி//
    நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  30. வே.நடனசபாபதி கூறியது...

    //நடைப்பயிற்சி பற்றி எழுத ஆரம்பித்து அநேக விஷயங்களை சொல்லிவிட்டுதிரும்பவும் நடைப்பயிற்சிக்கே வந்தது, நடைப்பயிற்சி செய்வோர் வீட்டில் இருந்து கிளம்பி, நடக்கும்போது நண்பர்களோடு பல் வேறு விஷயங்களை பேசிவிட்டு திரும்ப வீட்டுக்கு வருவதுபோல் இருந்தது.சுவைபட சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//
    சுவைபடக் கருத்துச் சொன்னதற்கு
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.//
    சிரமப் பட்டுக்கருத்துச் சொன்னதற்கு நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  32. FOOD கூறியது...

    //ஜொலி ஜொலித்திடும் எழுத்து நடை.//
    நன்றி ஆஃபீசர் சார்.

    பதிலளிநீக்கு
  33. Amutha Krishna கூறியது...

    //சூப்பர் அலசல்..//
    நன்றி அமுதா கிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  34. நிரூபன் கூறியது...

    //ஒரு பதிவில்,
    நடை பற்றியும்,
    ஒப்பாரி பற்றியும்.
    சித்தி உறவு முறைக்கான விளக்கம் பற்றியும்
    அதன் இன்றைய சீரியல் தொல்லை பற்றியும்,
    அழகாக விளக்கியிருக்கிறீங்க.ரசித்தேன் ஐயா.//
    நன்றி நிரூ!

    // வாழ்க்கை என்றால்.... வேதனையுடன் நகர வேண்டுமா எனும் விரக்தி தான் ஏற்படுகிறது.//
    அதுதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  35. பாலா கூறியது...

    //சார் மிக வித்தியாசமான, கடினமான முயற்சி. வெற்றி பெற்று விட்டீர்கள். அருமை. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?//
    எல்லாம் உங்கள் ஆதரவுதான்!
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  36. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //அனுபவம் பதிவு போடுகிறது//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  37. தக்குடு கூறியது...

    //ஜிலேபி! சிவாஜி!னு எல்லாம் சொல்லிட்டு கடைசில சிவாஜி வாயிலே ஜிலேபி!னு முடிச்ச விதம் அருமை! :))//
    நன்றி தக்குடு.

    பதிலளிநீக்கு
  38. koodal bala கூறியது...

    //நீளமா கமென்ட் எழுதி வடைய தொலைச்சிட்டேனே..........//

    வடை போனாப் போகுது. போண்டா,பஜ்ஜி,பக்கோடா....(மனோ ஸ்டைல்) எவ்வளவோ இருக்கு!

    பதிலளிநீக்கு
  39. பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.// அதனால் தானே அவர் நடிகர் திலகம் ஆனார்.

    பதிலளிநீக்கு
  40. ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//
    உண்மைதான்.

    சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பது

    பதிலளிநீக்கு
  41. ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//
    உண்மைதான்.

    சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பது

    பதிலளிநீக்கு
  42. கே. ஆர்.விஜயன் கூறியது...

    பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.// //அதனால் தானே அவர் நடிகர் திலகம் ஆனார்.//
    மிகச்சரி!நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  43. கோகுல் கூறியது...

    ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//
    உண்மைதான்.

    //சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பது//
    மறக்க முடியுமா எஸ்.பி. சௌத்ரியை?
    நன்றி கோகுல்!

    பதிலளிநீக்கு
  44. "ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?”
    அனுபவம் பேசுகின்றது. தொடர்ந்து எழுதுஙகள்.

    பதிலளிநீக்கு
  45. சீராசை சேதுபாலா கூறியது...

    "ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?”
    //அனுபவம் பேசுகின்றது. தொடர்ந்து எழுதுஙகள்.//
    நன்றி சேதுபாலா!நிச்சயம் எழுதுவேன்!

    பதிலளிநீக்கு
  46. நடையை பற்றி ஒரு உரை நடை .

    அழகாய் தெளிவாய் நல்ல நடையில் ஒரு விளக்கம் அருமை .

    பகிர்வுக்கு நன்றி ஐய்யா .

    பதிலளிநீக்கு
  47. M.R கூறியது...

    // நடையை பற்றி ஒரு உரை நடை .

    அழகாய் தெளிவாய் நல்ல நடையில் ஒரு விளக்கம் அருமை .

    பகிர்வுக்கு நன்றி ஐய்யா .//
    நன்றி M.R.

    பதிலளிநீக்கு
  48. ஐயா எழுத்து நகர்த்தல் சூப்பர்....
    சூப்பர்....
    நல்ல பதிவு...ஐயா

    பதிலளிநீக்கு
  49. vidivelli கூறியது...

    // ஐயா எழுத்து நகர்த்தல் சூப்பர்....
    சூப்பர்....
    நல்ல பதிவு...ஐயா//
    நன்றி விடிவெள்ளி.

    பதிலளிநீக்கு
  50. சிவாஜி நடையைப் பற்றி எழுதியதைப்படித்ததும் அவர் நடையழகைக் குறிப்பிட்டு 'ஆலயமணி' திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது! அவர் நடைக்காக மிகுந்த புகழ் பெற்ற‌து 'திருவிளையாடல் படத்தில் நடக்கும் மீனவன் நடைக்காகத்தான்!

    சர்க்கரை நோய்க்கு நடைப்பயிற்சி அவசியமான ஒன்று! தினமும் வெந்தயப்பவுடர் சாப்பிடுவதும் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு
  51. மனோ சாமிநாதன் கூறியது...

    //சிவாஜி நடையைப் பற்றி எழுதியதைப்படித்ததும் அவர் நடையழகைக் குறிப்பிட்டு 'ஆலயமணி' திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது! அவர் நடைக்காக மிகுந்த புகழ் பெற்ற‌து 'திருவிளையாடல் படத்தில் நடக்கும் மீனவன் நடைக்காகத்தான்!

    சர்க்கரை நோய்க்கு நடைப்பயிற்சி அவசியமான ஒன்று! தினமும் வெந்தயப்பவுடர் சாப்பிடுவதும் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும்.//
    வருகைக்கும்,கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி,மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  52. சிவாஜி....அடித்துக்கொள்ள இதுவரை ஆள் இல்லை. மகா நடிகன்!!

    பதிலளிநீக்கு
  53. ஒன்றிலிருந்து ஒன்று.... அப்பா ஒவ்வொன்றாய் கோர்த்து ஒரு தோரணமாக ஆக்கி விட்டீர்களே..... நன்றாக இருந்தது.

    நடை என்றது எனக்கு நினைவுக்கு வருவது சிவாஜியின் திருவிளையாடல் பட நடை. அதற்குத் தகுந்த இசை. ஆஹா எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  54. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // ஒன்றிலிருந்து ஒன்று.... அப்பா ஒவ்வொன்றாய் கோர்த்து ஒரு தோரணமாக ஆக்கி விட்டீர்களே..... நன்றாக இருந்தது.

    நடை என்றது எனக்கு நினைவுக்கு வருவது சிவாஜியின் திருவிளையாடல் பட நடை. அதற்குத் தகுந்த இசை. ஆஹா எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.//
    சிவாஜிக்கு இணையுண்டோ?
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு