மகளிர் தின சிறப்புப் பதிவு!
.....................................................
.....................................................
ஒரு கணவன் தான் ஒருவனே வேலை சென்று சம்பாதித்துக்
குடும்பத்தைக் காப்பாற்றுவதால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக எண்ணினான்.
தன் மனைவி
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அமர்ந்து சுகமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பதாகவும்
எண்ணினான்;இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மன நல மருத்துவரைப்
பார்க்கப் போனான்.
அங்கு நடந்த உரையாடல்.....
மருத்துவர்:நீங்கள் என்ன
செய்கிறீர்கள்,குமார்?
குமார்:ஒரு வங்கியில் அதிகாரி.
ம:உங்கள் மனைவி?
கு:அவள் வேலை பார்க்கவில்லை
ம:காலை உணவை உங்கள் வீட்டில் யார் தயார்
செய்கிறார்கள்?
கு:என் மனைவிதான்;அவள்தான் வேலை
பார்க்கவில்லையே!
ம:காலை எத்தனை மணிக்கு உங்கள் மனைவி
எழுந்திருக்கிறாள் என்பது
உங்களுக்குத் தெரியுமா?
கு:5 மணிக்கே எழுந்து விடுகிறாள் என நினைக்கிறேன்.ஏனென்றால்
வீடு சுத்தம் செய்து குளித்து காலைப் பலகாரம் செய்து,பின் எல்லோருக்கும் கையில்
கொடுப்பதற்கு மதிய உணவும் தயார் செய்ய வேண்டுமே!
ம:குழந்தைகள் பள்ளிக்கு எப்படிப்
போகிறார்கள்?
கு:பள்ளி அருகில்தான் ;மனைவியே
அழைத்துச் செல்வாள்;அவள்தான் வேலை
பார்ப்பதில் லையே!
ம:அதன் பின் உங்கள் மனைவி என்ன
செய்வார்கள்?
கு:கடைக்குப் போவாள் திரும்பி வந்து
துணி துவைப்பாள்;துவைத்த துணிகளை இஸ்திரி போட்டு வைப்பாள்.அவள்தான் வேலை
பார்க்கவில்லையே!
ம:மாலை வீடு திரும்பியதும் நீங்கள் என்ன
செய்வீர்கள்?
கு:நாள் முழுவதும் உழைத்தது களைப்பாக
இருக்காதா?ஓய்வெடுப்பேன் ; தொலைக்காட்சி பார்ப்பேன்.
ம:உங்கள் மனைவி என்ன செய்வாள்?
கு:குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்
கொடுப்பாள்.இரவு உணவு செய்வாள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துத் தூங்கச்
செய்வாள்.பின் நான் சாப்பிடுவேன்.பின்னர் அவள் பாத்திரங்கள், சமையல் அறை சுத்தம்
செய்து தூங்கப் போவாள்.
ம:இதிலிருந்து என்ன தெரிகிறது?
அதிகாலை முதல் இரவு வரை உழைக்கும் ஒரு
பெண்ணை ”வேலை பார்க்க வில்லை” என்று சொல்கிறீர்கள்.அவர்கள் செய்யும் வேலையை நீங்கள் மதிக்கவில்லை!
ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது கடினமான
பணி;அதைச் செய்கிறாள் அவள்.வாழ்க்கை யென்னும் நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம்
மனைவி!
மனைவியைப் புரிந்து
கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!
பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை
இன்ப மயமாக இருக்கும்!