தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 25, 2015

எங்கே நிம்மதி?

நானும் ரவுடிதான் தொடர்ச்சி( ஆக்கம் பார்த்தசாரதி)



இந்தத் தருணத்தில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேலு வீட்டின் உள்ளே நுழைந்தார். மாரிக்கு தூக்கி வாரிப் போட்டது.

ரொம்ப வருஷமாகப் பூட்டியிருந்த வீட்டிலே மேளச் சத்தம் கேட்கிறதே என்ற வியப்பி்ல் உளளே நுழைந்தேன்என்றார்.

நீதிபதி விவரத்தைச் சொன்னவுடன் மாரியைப் பாராட்டி விட்டு, “உங்கப்பா தான் எனக்கு தமிழ் வாத்தியார். சின்ன வயதில் அவர் விபத்தில் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதேன்.மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்ற குறளை நாலாவது வகுப்பில் அவர் தான் எனக்குக் கற்பித்தார்.  அந்தக் குறளைமெய்ப்பிக்கும் வகையில் இந்த இல்லத்தில் வாழ்ந்து அவர் புகழை நிலைநாட்டுஎந்த உதவியும் செய்யக் காத்திருப்பதாகச் சொல்லி விடை பெற்றார். மாரி சுய நினைவிற்கு வந்தான்.

விருந்தினர் ஆசி கூறி விடை பெற்றனர். நீதிபதயும் மாரியை மனதார வாழ்த்தி ஆசிகளை அள்ளி வழங்கினார்.

அன்று மாலை ஐந்து மணி அளவில் மாரி சொந்த வீட்டில் தன் வாழ்க்கையை தொடங் கினான். இறந்த காலம் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. எதிர்காலமோ புதிராக இருந்தது. அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டான்.

சிறிது இளைப்பாறி, பின் நன்றாக குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் தன் தாய் தந்தையரை பிரிந்த பிறகு முதன் முதலாக சமயபுரத்தாளை தரிசிக்கச் சென்றான்.

சுமார் 2 மணி நேரம் தனக்குத் தெரிந்த படி ஒர் அமைதியான இடத்தை தெரிவு செய்து தியானத் தில் ஆழ்ந்தான். தன் வாழ்க்கையில் தற்சமயம் நடக்கும் அதிசயங்கள் அவனை வியப்பில் ஆழ்த்தின.  தாய் தந்தையின்  நினைவுகள் அவனை முழுவதும் ஆட் கொண் டன. இரவு சுமார் 07.30 மணிக்கு கோவிலில் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களை வயிறார உண்டு பின் கோவில் தர்ம கர்த்தாவை சந்தித்து அடுத்த வெள்ளியன்று அன்ன தானத்திற்காக தாய் தந்தையர் பெயரில் ஒரு சீட்டை ரூ.2.000/- ரூபாய் செலுத்தி பெற்றுக்  கொண்டான். அழகான சமயபுரம் மாரியம்மன் வர்ணப்படம் அவனுக்கு வழங்கப்பட்டது. அதுவும் பூஜை அறையை அலங்கரிக்கப் போகிறது. மனதில் உள்ள சுமை சற்று குறைந்தது.

சுமார் 9 மணிக்கு தூங்கப் போனான். தூக்கம் வராமல் யோசனையில் ஆழ்ந்தான்.தான் கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாயை கங்காராம் வாங்கி துரிதமாக பட்டுவாடா செய்து முடித்தது அவனை சிந்திக்கவைத்தது.இனிமேல் எங்களை சந்திக்க முயற்சிக்காதே, நாங்கள் உடனடியாக வேறு ஊர் போகப் போகிறோம். எங்களை முழுவதுமாக மறந்து விடு. உடனே டெல்லியை விட்டு போய்விடு. எங்களுடன் எடுத்த போட்டோக்கள் எதுவாக இருந்தாலும் உடனே கொளுத்திவிடுஎன்று கங்காராம் அன்று பரிதவித்ததை நினைத்து இன்று பயந்தான்.

நல்ல வேளை, முஸ்லீம் பெரியவரும் உடனே கணக்கை முடித்து அனுப்பிவிட்டார். அவர் 20 ஆயிரம் கொடுத்தது. இன்னும் அவனுக்கு திகைப்பாகவே இருந்தது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?

பாங்கில் கீழே கிடந்த பணத்தை அபேஸ் பண்ணியது அவனை மிகவும் வருத்தியது. இதைச் செய்யாமல் வீட்டை மீட்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று கலங்கினான். ஒரு இலட்சம் ரொக்கம் காணாமல், பேங்கில் உள்ளவர்கள் எவ்வளவு அவஸ்தைப் பட்டார் களோ என்ற திக்கு முக்காடி போனான்.

அன்று போலீஸ் வந்தது. தன்னை கைது செய்யத்தான் என நினைத்து வெலவெலத்துத் தான்  போனான்.  வங்கியில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்திருக்கக் கூடாது என்று மனமுருகி பிரார்த்தித்தான்.

பண்ணுவதெல்லாம் பண்ணிவிட்டு பிரார்த்தனை செய்வதில் என்று பயன் என்பதையும் உணர்ந்தான். குற்ற உணர்வு தான் கூடியது. பாங்கில் கிடைத்த பணத்தை பற்றி எந்தத் தருணத்திலும் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டான்.

(தொடரும்)

டிஸ்கி:ஆய்வாளர் ராஜவேலுவுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்க  வேண்டும்.இனித் தொடர்ந்து வரலாம்  ஞான ஒளி மேஜர் மாதிரி;ஏழை படும்பாடு ஜாவர் மாதிரி!

9 கருத்துகள்:

  1. இதைப் படிக்கும்போது ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. தப்பு செய்தால் தண்டனை பெற்றுத்தானே ஆகவேண்டும். காத்திருக்கிறேன் மாரிக்கு என்ன தண்டனை கிடைத்தது என அறிய .

    பதிலளிநீக்கு
  2. மாரிக்கு நிம்மதி கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் தொடருகிறேன் த.ம7
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தொடரை தொடர்ந்து படிக்காமல் விட்டுவிட்டோமோ என்று நினைத்தேன். நல்லவேளை தொடர்ந்து வருகிறது. தொடர்கின்றேன்.

      நீக்கு
  5. முன் பகுதியை படிக்காவிட்டாலும் கதை சுவாரசியமாக செல்கிறது. முந்தைய பகுதிகளை படித்து விதுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. இதை பிரயாணத்திலிருந்து வந்ததும் வாசித்தோம்...ஆனால் கருத்து இட்டு சுற்றிக் கொண்டே இருந்து இட முடியாமல் இணையம் படுத்தியதால் போட முடியாமல் போனது. இப்போது முடிவே பார்த்தாயிற்று...

    பதிலளிநீக்கு