தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 18, 2015

எங்கே அந்த ஆடு?




இன்று ஒரு குட்டிக் கதையோடு தொடங்குகிறார் ஸ்வாமி

ஏன் இந்தக் கதை என்பதைக் கடைசியில் விளக்குவார்

ஒரு சிற்றூர்

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

இரண்டு சிறுவர்களுக்குச் செய்த குறும்பெல்லாம் அலுத்துப் போய்ப் புதிதாக ஏதாவது செய்யும் ஆசை பிறந்தது

அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அவர்கள் கண்ணில் பட்டன.

உதயமாயிற்று புதிய குறும்பு.

மூன்று ஆடுகளைப் பிடித்து அவற்றின் மேல் 1,2,4 என்று எண்கள் குறிப்பிட்டுப்  பள்ளிக்குள் விட்டுக் கதவை மூடிவிட்டனர்.

திங்கள் காலை பள்ளி திறந்ததும் வந்தவர்கள் அங்கு கிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளைக் கண்டனர்

ஏதோ ஆடுகள் பள்ளிக்குள் நுழைந்து விட்டன எனத் தெரிந்து கொண்டனர்

தேடுதல் ஆரம்பமாயிற்று

சிரிது நேரத்தில் மூன்று ஆடுகளும் பிடிபட்டன..

பிடிபட்ட ஆடுகளின் மேல் எண்கள் 1,2,4  எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்.. 

அப்படியானால் 3வது எண்ணுள்ள ஆடு எங்கே ? 

பள்ளிக்குள் எங்கேயோதான் இருக்க வேண்டும்

அன்று பகல் முழுவதும் பள்ளியின் இண்டு இடுக்கெல்லாம் தேடியும் 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்கவில்லை. 

அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆசிரியர்கள்,எழுத்தர்கள் கடைநிலைப் பணியாளர்கள், தலைமை ஆசிரியரும் முழுவதும் தேடும் பணியில் இறங்கி 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்காமல் வெறுத்துப்போயினர்.

இல்லாத ஒரு ஆடு எப்படிக் கிடைக்கும்?!

ஏன் இந்தக் கதை?

அவர்களைப் போலத்தான் நாமெல்லாம்.

நம்மிடம் இருக்கும் ஆடுகளை விட்டு விட்டு இல்லாத ஆடுகளைத் தேடிக் கொண்டி ருக்கிறோம்

நம்மிடம் இருக்கும் திறமைகள்,வாய்ப்புகள்,வலிமை இவற்றை விட்டு விட்டு இல்லாத வற்றைத் தேடி அலுப்படைகிறோம்.

இருப்பதை விட இல்லாததே எப்போதும் பூதாகரமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

அந்த நிலையிலிருந்து விடுபடுங்கள்.

முயலுங்கள்

முயன்றால் முடியாததுண்டோ?

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)

14 கருத்துகள்:

  1. இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே என்று பாடத் தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, நல்லதொரு அருமையான அறிவுரை. அதை ஒரு குட்டியூண்டு கதைமூலம் சொல்லி விளக்கியுள்ளது சிறப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா சுவாமி பித்தானந்தாவின் அறிவுரை மிகவும் நன்றி வாழ்வியல் உண்மை ஐயா

    பதிலளிநீக்கு
  4. நம்மிடம் இருக்கும் திறமைகள்,வாய்ப்புகள்,வலிமை இவற்றை விட்டு விட்டு இல்லாத வற்றைத் தேடி அலுப்படைகிறோம்.

    இருப்பதை விட இல்லாததே எப்போதும் பூதாகரமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

    நிஜமான கருத்து! நமக்கு கீழே உள்ளவர் கோடி! நினைத்து பார்த்து நிம்மதி தேட அறியாதோராயும் இருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  5. அவசியமான அறிவுரை
    பித்தானந்தாவுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி

    அருமை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. பள்ளியில் ஒரு நீதி வகுப்பில் அமர்ந்துவிட்டு எழுந்ததுபோலிருந்தது. இக்காலகட்டத்திற்குத் தேவையே. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கதை மிக நன்றாக இருக்கிறது ஐயா. கூடவே, இது மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் திரு.ராஜேந்திர தேஷ்பாண்டே கூறிய குட்டிக்கதை என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். இந்தக் குட்டிக்கதையை HR Community Yahoo குழுமத்தின் மின்னஞ்சல் மூலம் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள்கூட, மற்றவர்களின் படைப்புக்கு சொந்தம் கொண்டாடுவது மிகுந்த ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

    -சேட்டைக்காரந்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சேட்டைக்காரன்
      நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சலை நான் பார்த்ததில்லை;இதுதிரு தேஷ்பாண்டே என்பவர் கூறியது என்பதும் தெரியாது; அவரைப்பற்றியும் தெரியாது;அந்த அளவுக்கு என் வாசிப்பு அனுபவம் இல்லை என்பதே உன்மைஎன் நன்பர் ஒருவர் இக்கதையைச் ொன்னார்.பிடித்திருந்தது;பகிர்ந்து கொண்டேன்,இதன் மூலத்தை நான் அறியவில்லை.இது போன்ற கதைகள் பெரும்பாலும் செவிவழியாகவே பரவுகின்றன.
      மன்னிக்கவும்

      நீக்கு
  9. அருமையான கதை ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு தத்துவம் சொன்ன கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு