தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?



ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்விஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

 அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது)

14 கருத்துகள்:

  1. பெண் சம்பத்தப்படாத விஷயம்னு ஏதாவது இருக்குதா?

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. //பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.//

    அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான சூட்சுமக்கதை
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    புரிந்து கொண்டேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. ஹா... ஹா...

    புரிகிறது ஐயா... நன்றாகவே புரிகிறது...!

    பதிலளிநீக்கு
  7. அசத்தலான முடிவுடன் அமைந்த அருமையான கதை

    பதிலளிநீக்கு
  8. கதை மறைமுகமாக சொல்லியிருக்கும் கருத்து அருமை!
    த ம 8

    பதிலளிநீக்கு
  9. #பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.#
    கணவனுக்கும் சேர்த்து முடிவெடுப்பவள் மனைவி ,கணவன் எப்படி தன் முடிவைத் திணிக்க முடியும் :)பெண்ணுக்கும் மனைவிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  10. பிரமாதம்.
    தானும் முடிவெடுக்கக் கூடாது, தனக்காக எடுக்கப் பட்ட முடிவு தான் எடுததிருக்கக் கூடிய முடிவு போல் பிடித்திருக்க வேண்டும், முடிவின் பொல்லாத விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்கத் தேவையற்ற முடிவாக இருக்க வேண்டும்.... பெண்ணின் மனது ஆழம் தான்.

    பதிலளிநீக்கு