தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 25, 2013

தேடி வந்த ஆவி!




அன்று அவர்கள் திருமண தினம்.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.

ஆரம்பகாலத்தில் இருந்த பரஸ்பர அன்பு குறைந்து விட்டது

எல்லாவற்றுக்கும் விவாதம்;சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடச் சச்சரவு என வாழ்க்கை மாறித்தான் போய் விட்டது.

ராதா காத்திருந்தாள்,கணவன் ராஜாவின் வருகைக்காக.

அவன் இன்று திருமண நாள் என்பதை நினைவில் வைத்திருப்பானா?

ராதாவுக்கு நம்பிக்கை இல்லை.

இருப்பினும் ஓர் அற்ப ஆசை,அவன் பரிசோடு வந்து ஆச்சரியப்படுத்த மாட்டானா என்று!

வெளியில் மழை வேறு .

ராதா காத்திருந்தாள்

அழைப்பு மணி ஒலித்தது.

ராதா ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்......

கையில் ஒரு பரிசுப் பொட்டலத்துடன் மழையில் நனைந்த கோலத்தில் ......ராஜா!

“இனிய மண நாள் வாழ்த்துகள்,அன்பே 

அவள் அவனை அணைத்த்க்கொண்டாள்.

மகிழ்ச்சி வெள்ளம்!

உள்ளே சென்றனர்.

அவன் தலையைத் துவட்டி விட்டாள்

மாற்று ஆடை கொடுத்தாள்

சூடான காபி தயாரித்துக் கொடுத்தாள்.

இருவரும் அந்தக்காலம் திரும்பி வந்தது போல் கொஞ்சியவாறு பேசத் துவங்கினர்.

அடுத்த அறையிலிருந்த் தொலைபேசி அலறத் தொடங்கியது.

சலிப்புடன் எழுந்தாள் ராதா...”சே! சிவ பூஜையில் கரடி மாதிரி!இது வேற”

எடுத்தாள்.

ஆண்குரல்,

“ஹலோ! இது ராஜா அவர்களின் வீடா?”

“ஆமாம்.”

“நாங்கள் டி-1  காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம்.ஒரு சாலை விபத்தில் ராஜா இறந்து விட்டார்.அவர் பர்சில் இருந்த  விசிடிங் கார்டிலிருந்து எண்ணைத் தெரிந்து கொண்டோம். வருந்துகிறோம் அம்மா.”

ராதாவுக்கு மயக்கம் வருவது போல் இருந்த்து!

இது எப்படி?

அடுத்த அறையில் கணவன் இருக்கிறானே!

ஒரு வேளை........

தன்னைப் பார்க்க வரும்போது இறந்த கணவனின் ஆவி அவளைத் தேடி வந்து விட்டதோ?

மேலுலகம் செல்லுமுன் அன்புக்குரியவரைக் காண ஆவி வரும் என்று கேள்விப்பட்டி ருக்கிறாள்

அடுத்த அறைக்கு ஓடினாள்

அங்கு.....

அவன் இல்லை!

உண்மைதான்

அவன் போய் விட்டான்.

பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கியிருக்கலாமே!என்ன செய்வேன்.நான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பின்றி போனதே ”

அழத் தொடங்கினாள்

அப்போது...........

கழிப்பறைக்கதவு திறந்தது.....

ராஜா வெயே வந்தான்

”ராதா! சொல்ல மறந்துட்டேன்.இன்னிக்கு என் பர்ஸ் தொலைந்து போய் விட்டது.நல்ல வேளை ஏடிஎம் அட்டையெல்லாம் என் கைப்பயில் வைத்திருந்தேன்!”

.....................................................!

(இணையத்தில் படித்ததின் தழுவல்!)

33 கருத்துகள்:

  1. அப்பாடா... இரண்டு திருப்பங்களும் செம...!

    பதிலளிநீக்கு
  2. ஆவிகள் பற்றி எழுதுவதே இணையத்தில் ஆவி(ஆகி) வந்த விஷயமாயிற்றே! த.ம.3

    பதிலளிநீக்கு
  3. அருமையான திருப்பம்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நிமிஷம் பகீர்னு ஆயிருச்சு.... கடைசி ட்விஸ்ட் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  5. எதிர்பாராத அருமையான திருப்பங்களுடன் இனிமையான முடிவு. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  6. சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கு முன்பே இந்த கதையின் முடிவில் நிச்சயம் எதிர்பாராத ஒன்று நடக்கும் என நினைத்தேன். அதுபோலவே கடைசியில் எதிர்பார்க்காத முடிவைத் தந்துள்ளீர்கள்.கதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. எதிர்பாராத திருப்பம்!!
    கதை அருமை பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. நீங்களும் ஆவியை அழைத்துவிட்டீர்களா? அருமை

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    அருமையான கதை.. மனதை கவர்ந்துள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நீங்கதான் நிஜமான மர்மக்கதை மன்னன்!

    பதிலளிநீக்கு
  11. நல்லமுடிவு! மனதில் நிம்மதி!

    பதிலளிநீக்கு
  12. அருமையான திருப்பங்களுடன் அசத்தலான கதை! சூப்பர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ராதா! சொல்ல மறந்துட்டேன்.இன்னிக்கு என் பர்ஸ் தொலைந்து போய் விட்டது.நல்ல வேளை ஏடிஎம் அட்டையெல்லாம் என் கைப்பயில் வைத்திருந்தேன்!”//ஹப்பா..கடைசி பாராவில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு