தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 24, 2013

ஹாலிடே!ஜாலிடே!!



 ஒரு வயதான தம்பதிக்கு நினைவாற்றல் குறைந்து போய்விட்டது. நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் வகுப்பொன்றில் சேர்ந்தனர்.அதற்குப்பின் அந்த வகுப்பின் பயன் பற்றிப் பலரிடமும் பெருமையாய் எடுத்துரைத்தனர்.சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவர் அந்தக் கணவரிடம் வந்தார்.அவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் பெயர் என்ன எனக் கேட்டார்.

அவர் யோசித்தார்;பின் வந்தவரிடம் கேட்டார்”அந்த வாசமுள்ள மலர்,செடியில் முள் கூட இருக்குமே ,அதன் பேரென்ன?”என்று கேட்டார்.நண்பர் சொன்னார் “ரோஜா”

க்கணவர் உடனே தன் மனைவியை கூப்பிட்டுக் கேட்டார்”ரோஜா! நமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் பெயர் என்ன?”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    கடசி பகுதியை படித்தவுடன் சிரிப்பு வந்தது.....பதிவு அருமை...வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சென்ற தலைப்பைப் போன்றே 'ஞாபக மறதியின் உச்சக் கட்டம் 'னு வைத்திருக்கலாம் !
    த.ம 2

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன்.... இதே போல ஒரு விளம்பரம் வந்திருப்பது நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  4. எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...!!!!!
    ஒரு சமயம் வயசாயிட்டால் இப்படி எல்லாம் வருதோ?

    படித்துச் சிரித்தேன்.

    ஜோக் அருமை சென்னை பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. /அந்த வாசமுள்ள மலர்,செடியில் முள் கூட இருக்குமே/
    மலரில் வாசமிருப்பது நினைவில் இருக்கிறது ஆனால் மலரின் பெயர் தெரியாது. மனைவியின் பெயரும் அந்த மலரின் பெயரும் ஒன்றுதான் என்பதும் நினைவில் இருக்கிறது ஆனால் மனைவியின் பெயர் தெரியாது என்பது எங்கோ இடிக்கிறதே!

    பதிலளிநீக்கு