தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

என்னதான் சொன்னான்?!

குப்பு என்கிற குப்புசாமிக்கும்,சுப்பு என்கிற சுப்புலக்ஷ்மிக்கும் வயது 12.
இருவரும் நண்பர்கள் என்பதையும் தாண்டிக் காதலர்கள் என உணர்ந்தார்கள்!
(எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்)

குப்பு, சுப்புவின் அப்பாவிடம் சென்றான்.சொன்னான் –
”மாமா!நானும் சுப்புவும் காதலிக்கிறோம்.கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம்.எஙளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்!”

அவருக்குச் சிரிப்பு வந்தது.கேட்டார்”உங்கள் இருவருக்கும் வயது 12தான் ஆகிறது.எங்கு வசிப்பீர்கள்?”

”உங்கள் வீடுதான் பெரியது,மாமா.இதுதான் சுப்புவுக்கு சௌகர்யம்.எனவே இங்குதான் வசிப்போம்”.

அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்”அது சரி.செலவுக்கு என்ன செய்வீர்கள்?வேலைக்குப் போகும் வயதாகவில்லையே?”

குப்பு சொன்னான்”எனக்குப் பாக்கெட் பணம் அப்பா தருகிறார் .சுப்புவுக்கு நீங்கள் தருகிறீர்கள்.இங்கேயே சாப்பிட்டுக் கொள்வோம்.இது போதாதா?”

அவன் பதில்களைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர் கேட்டார்.”எல்லாவற்றையும் யோசித்து விட்டீர்கள்.உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வீர்கள்?”

அவன் பதில் சொன்னான் ………

.......................

அதைக்கேட்ட அவர் அதிர்ந்து போனார்!

அந்தப் பதிலை அடிக்க என் கணினி மறுத்து விட்டது.

மடிக்கணினி இல்லைதான்.ஆனாலும் மடியான கணினி!

சரி வேறு முடிவு சொல்லலாம் என யோசித்தேன் ...
...........................


அதையும் ஏற்றுக் கொள்ளக் கணினி மறுத்துவிட்டது.

என் செய்வேன்?!
மன்னியுங்கள்!
நீங்களே உங்களுக்குத் தோன்றிய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்!
அதை தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லாதீர்கள்!!
சென்சார் செய்து விடுவேன்!!!

68 கருத்துகள்:

  1. ஓஹோ.. இப்ப உங்க போலாக் கிற்கும் சென்சார் வந்திடுச்சா?

    பதிலளிநீக்கு
  2. ஐயா ... செம இண்ட்ரஸ்டிங்கான மேட்டர். போன் போட்டாவது சொல்லிடுங்க. இல்லாட்டி தலை வெடிச்சிடும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஐயா வந்தேன் ...சென்சார் என்று சொல்லிவிட்டேர்கள் அதனால ஒன்னும் சொல்லாம போறேன் ஐயா ஹி ஹி

    பதிலளிநீக்கு
  4. என்னதான் சொல்லியிருப்பான்

    யூகித்துக் கொள்கிறேன் .

    பதிலளிநீக்கு
  5. தமிழ் மணத்தில் சேர்க்க வில்லை ஏன் அய்யா

    இன்ட்லி ஐந்து

    பதிலளிநீக்கு
  6. //* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
    ஓஹோ.. இப்ப உங்க போலாக் கிற்கும் சென்சார் வந்திடுச்சா?//

    இந்த குடும்ப்ஸ்த பதிவர்கள் நிலைமை வரவர ரொம்ப மோசமாகிக்கிட்டே போகுதே!

    பதிலளிநீக்கு
  7. முடிவு எனக்குத் தெரியும்..இங்க என் மடிக்கணினியும் அடிக்க மறுக்குது..வேணாம்!

    பதிலளிநீக்கு
  8. சார் சும்மா இருக்கற பதிவர்களையும் சொரிஞ்சு உட்டுட்டீங்களே,,,,,,,
    வாழ்க சென்னைப்பித்தன் தரச்சான்று நிறுவனம்..(sensor board)

    பதிலளிநீக்கு
  9. ஒரு வேளை ஏற்கெனவே பிள்ளை பொறந்துட்டுதோ...எனி சென்சார் ?

    பதிலளிநீக்கு
  10. ஐயய்யோ எனக்கு எஸ் ஜே சூர்யா நினைவுக்கு வர்றாரே....

    பதிலளிநீக்கு
  11. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஓஹோ.. இப்ப உங்க போலாக் கிற்கும் சென்சார் வந்திடுச்சா?//
    என்ன செய்ய?!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  12. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // ஐயா ... செம இண்ட்ரஸ்டிங்கான மேட்டர். போன் போட்டாவது சொல்லிடுங்க. இல்லாட்டி தலை வெடிச்சிடும் போல இருக்கு.//
    போன் எல்லாம் சரியா வராது. நாகர்கோவில் வரும்போது சொல்கிறேன்!
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  13. ரியாஸ் அஹமது கூறியது...

    //ஐயா வந்தேன் ...சென்சார் என்று சொல்லிவிட்டேர்கள் அதனால ஒன்னும் சொல்லாம போறேன் ஐயா ஹி ஹி//
    அதுதான் த்ரில்!
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  14. உள்ளேன்
    ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  15. M.R கூறியது...

    //என்னதான் சொல்லியிருப்பான்

    யூகித்துக் கொள்கிறேன் .//
    யார் கிட்டயும் சொல்லிடாதீங்க!

    பதிலளிநீக்கு
  16. M.R கூறியது...

    //தமிழ் மணத்தில் சேர்க்க வில்லை ஏன் அய்யா

    இன்ட்லி ஐந்து//
    தமிழ்மணம் ரொம்பத் தகராறு செய்தது ரமேஷ்!இப்போது இணைத்துவிட்டேன்.
    சிரமம் பாராமல் மீண்டும் போய் ஓட்டுப்போட்டு விடுங்களேன்!--இது முன்பே பின்னூட்டமிட்டு விட்ட அனைவருக்குமான வேண்டுகோள்!
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  17. செங்கோவி கூறியது...

    //* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
    ஓஹோ.. இப்ப உங்க போலாக் கிற்கும் சென்சார் வந்திடுச்சா?//

    //இந்த குடும்ப்ஸ்த பதிவர்கள் நிலைமை வரவர ரொம்ப மோசமாகிக்கிட்டே போகுதே!//
    அதானே!

    பதிலளிநீக்கு
  18. செங்கோவி கூறியது...

    //முடிவு எனக்குத் தெரியும்..இங்க என் மடிக்கணினியும் அடிக்க மறுக்குது..வேணாம்!//
    நல்ல கணினி!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  19. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

    // சார் சும்மா இருக்கற பதிவர்களையும் சொரிஞ்சு உட்டுட்டீங்களே,,,,,,,
    வாழ்க சென்னைப்பித்தன் தரச்சான்று நிறுவனம்..(sensor board)//
    :) நன்றி கார்த்தி!

    பதிலளிநீக்கு
  20. செங்கோவி கூறியது...

    //இது கதையா..உண்மைச் சம்பவமா?//
    யாருக்குத் தெரியும்?!
    இது தமிழாக்கப்பட்ட மின்னஞ்சல்!

    பதிலளிநீக்கு
  21. koodal bala கூறியது...

    //ஒரு வேளை ஏற்கெனவே பிள்ளை பொறந்துட்டுதோ...எனி சென்சார் ?//
    கடவுளே!ரெண்டு பேருக்கும் வயது 12தான்!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஐயய்யோ எனக்கு எஸ் ஜே சூர்யா நினைவுக்கு வர்றாரே....//
    இயக்கப் போயிடலாமா?!

    பதிலளிநீக்கு
  23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // சென்சார் ஹி ஹி சென்சார் ஹி ஹி...//
    ஹா,ஹா,சென்சார்!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  24. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // உள்ளேன்
    ஐயா!//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  25. :)) என்னுடைய கருத்து ரிசர்வ்ட்... [Judgement Reserved....] என்பது போல்...

    பதிலளிநீக்கு
  26. அய்யய்யோ! குழபி விட்டுட்டீங்களே பாஸ்? சரி விடுங்க எப்போ பதில் சொல்வீங்க?

    பதிலளிநீக்கு
  27. என்னோட பதில் என்னான்னா?
    ஒ சென்சார்!!
    எஸ்கேப்!(எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

    பதிலளிநீக்கு
  28. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // :)) என்னுடைய கருத்து ரிசர்வ்ட்... [Judgement Reserved....] என்பது போல்...//

    அதுதான் சரி!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  29. ஜீ... கூறியது...

    //அய்யய்யோ! குழபி விட்டுட்டீங்களே பாஸ்? சரி விடுங்க எப்போ பதில் சொல்வீங்க?//
    ரகசியமாத்தான் சொல்லணும்!
    நன்றி ஜீ!

    பதிலளிநீக்கு
  30. கோகுல் கூறியது...

    // என்னோட பதில் என்னான்னா?
    ஒ சென்சார்!!
    எஸ்கேப்!(எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)//
    கெட்டிக்காரர்தான்!
    நன்றி கோகுல்!

    பதிலளிநீக்கு
  31. விடையை சொல்லிடுங்க... ஒரு குளுவாவது கொடுத்திருந்தீங்கன்னா கண்டு பிடிச்சுருப்போம்.. நாங்க இந்த மேறி விசயத்துல டீயூப் லைட்... விடை தெரியாமலே சோகத்துடன் செல்வோர் சங்கம்

    பதிலளிநீக்கு
  32. வந்தமா,தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டு போட்டமான்னு கெளம்பறேன்.

    பதிலளிநீக்கு
  33. மாய உலகம் கூறியது...

    // tm 5,மூணலயும் குத்து...//
    நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  34. மாய உலகம் கூறியது...

    //விடையை சொல்லிடுங்க... ஒரு குளுவாவது கொடுத்திருந்தீங்கன்னா கண்டு பிடிச்சுருப்போம்.. நாங்க இந்த மேறி விசயத்துல டீயூப் லைட்... விடை தெரியாமலே சோகத்துடன் செல்வோர் சங்கம்//
    காலம் கனியட்டும்.காத்திருங்கள்!

    பதிலளிநீக்கு
  35. M.R கூறியது...

    // தமிழ் மணம் ஆறு//
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  36. FOOD கூறியது...

    //வந்தமா,தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டு போட்டமான்னு கெளம்பறேன்.//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  37. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // hi hi tm 8//
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  38. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // hi hi tm 8//
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  39. ஏன் சார்.. 12 வயசுக்காரங்க கிட்டே 'குழந்தை பிறந்தா'னு கேள்வி கேக்குறதே சென்சார் சமாசாரமாச்சே?

    பதிலளிநீக்கு
  40. Subbu's father deserves this .. for having committed the sin of engaging kuppu in this kind of conversation ..probably he was deriving some kind of thrill ....vasudevan

    பதிலளிநீக்கு
  41. Vasu கூறியது...

    // Subbu's father deserves this .. for having committed the sin of engaging kuppu in this kind of conversation ..probably he was deriving some kind of thrill //
    ha,ha,ha.well said vasu!
    thanks for your visit and comments!

    பதிலளிநீக்கு
  42. அப்பாதுரை கூறியது...

    // ஏன் சார்.. 12 வயசுக்காரங்க கிட்டே 'குழந்தை பிறந்தா'னு கேள்வி கேக்குறதே சென்சார் சமாசாரமாச்சே?//
    கேட்கத்தகாத கேள்வி கேட்டார்.கேட்க முடியாத பதில் கிடைத்தது!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  43. போச்சு ஏலம் போச்சு
    தூக்கம் போச்சு
    அவன் என்ன சொல்லியிருப்பான் ?????????????????

    பதிலளிநீக்கு
  44. குப்பு என்ன சொல்லி இருப்பான் என யோசிக்கிறேன் ... யோசிக்கிறேன் .... யோசித்துக்கொண்டே இருக்கிறேன். விடை தெரியவில்லை.
    காலம் கனியட்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
    அதற்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐய்யா

    பதிலளிநீக்கு
  46. கவி அழகன் கூறியது...

    //போச்சு ஏலம் போச்சு
    தூக்கம் போச்சு
    அவன் என்ன சொல்லியிருப்பான் ?????????????????//
    ?????? ஹா,ஹா,ஹா!!!!
    நன்றி கவி அழகன்.

    பதிலளிநீக்கு
  47. வே.நடனசபாபதி கூறியது...

    //குப்பு என்ன சொல்லி இருப்பான் என யோசிக்கிறேன் ... யோசிக்கிறேன் .... யோசித்துக்கொண்டே இருக்கிறேன். விடை தெரியவில்லை.
    காலம் கனியட்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
    அதற்கு காத்திருக்கிறேன்.//

    தனியாகச் சொல்கிறேன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  48. M.R கூறியது...

    // சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐய்யா//

    ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே!
    விடுதலைநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  49. ஏதோ கொடூரமான பதில் சொல்லியிருப்பார்கள் போல...

    பதிலளிநீக்கு
  50. //எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்..//


    உண்மைதான். உலகத்தின் அத்தனை விஷங்களும் இப்போதெல்லாம் நேரடியாக வீட்டு வரவேற்பறைக்கே வந்து விழுகிறதே...

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் ஐயா,
    என் இன்ரநெட்டிற்கு ஏழரை பிடித்து விட்டது,
    வரும் வியாழன் தான் கனெக்சன் சரி பண்ணுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
    ஆதலால் தால் வலைப் பக்கம் வர முடியலை.
    மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  52. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்,
    என் பிந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
  53. கதையினூடாக இரு வெவ்வேறு பதில்கள் தொக்கி நிற்கின்றன.

    ஒன்று..குழந்தையைக் கொன்னுடுவோம் என்று சொல்லியிருக்கலாம்......

    இல்லே...வருமுன் காப்போம்...............
    என்று சொல்லியிருக்கலாம்.

    ஆனால்.............இந்தக் காலப் பசங்க ரொம்ப விபரமானவங்க என்பதனை மாத்திரம் இக் கதை சொல்லி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  54. என்னதான் சொல்லியிருப்பான்?

    பதிலளிநீக்கு
  55. பாரத்... பாரதி... கூறியது...

    //ஏதோ கொடூரமான பதில் சொல்லியிருப்பார்கள் போல...//
    எல்லாம் நடப்பதுதான்!

    பதிலளிநீக்கு
  56. பாரத்... பாரதி... கூறியது...

    //எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்..//


    // உண்மைதான். உலகத்தின் அத்தனை விஷங்களும் இப்போதெல்லாம் நேரடியாக வீட்டு வரவேற்பறைக்கே வந்து விழுகிறதே...//
    உண்மை!
    நன்றி பாரத்!

    பதிலளிநீக்கு
  57. நிரூபன் கூறியது...

    // வணக்கம் ஐயா,
    என் இன்ரநெட்டிற்கு ஏழரை பிடித்து விட்டது,
    வரும் வியாழன் தான் கனெக்சன் சரி பண்ணுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
    ஆதலால் தால் வலைப் பக்கம் வர முடியலை.
    மன்னிக்கவும்.//
    we are missing your blog post niruu!

    பதிலளிநீக்கு
  58. நிரூபன் கூறியது...

    //கதையினூடாக இரு வெவ்வேறு பதில்கள் தொக்கி நிற்கின்றன.

    ஒன்று..குழந்தையைக் கொன்னுடுவோம் என்று சொல்லியிருக்கலாம்......

    இல்லே...வருமுன் காப்போம்...............
    என்று சொல்லியிருக்கலாம்.

    ஆனால்.............இந்தக் காலப் பசங்க ரொம்ப விபரமானவங்க என்பதனை மாத்திரம் இக் கதை சொல்லி நிற்கிறது.//
    முதல் பதில் கொடூரம்.
    இரண்டாவது நான் நினைத்தது!
    அவன் சொன்னது!!
    நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  59. நிரூபன் கூறியது...

    //உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்,
    என் பிந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.//
    உங்களுக்கும் என் தாமதமான விடுதலை நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  60. மாலதி கூறியது...

    //என்னதான் சொல்லியிருப்பான்?//
    விட்டு விடுங்கள் மாலதி!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  61. கலக்கல்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு