தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 15, 2009

ஏலம்!ஏலம்!என் கன்னிமை ஏலம்!

அமெரிக்காவில்,கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருத்தி,தன் மேற்படிப்புச் செலவுக்காக ஆன்லைனில் தன் கன்னிமையை ஏலம் விட்டிருக்கிறாள்.(ஆதாரம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா 14-01-09) ஒரே ஒரு இரவு அவளுடன் இருந்து அவளைக் கன்னி கழிப்பதற்கு இது வரை அளிக்கப்படத் தயாராக இருக்கும் அதிக பட்சத் தொகை--25 லட்சம் டாலர்கள்!!.மிக மதிப்பு வாய்ந்த கன்னிமை தான்.யாருக்காவது அவள் கன்னிமை பற்றிச் சந்தேகம் இருக்குமானால்,அதற்காக மருத்துவச் சோதனைக்குத் தயார் என்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள்.அந்தப் பெண் மேலும் சொன்னதாவது,அவளது மூத்த சகோதரியும் தனது படிப்புச் செலவுக்காக மூன்று வாரங்கள் பாலியல் தொழில் செய்தாள் என்பது!.

இந்தப் பெண்ணுக்கு கிடைக்கும் தொகையைப் பார்த்து மேலும் பலர் இது் போன்ற ஏலத்தில் ஈடுபடக் கூடும் (ஆண்களும்?!)தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கும் போது அவற்றின் விலை குறையும்!சில காலம் சென்று வாங்க ஆளில்லாத நிலை ஏற்படும்!
இண்டெர்னெட் யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

கன்னிமைக்கான மருத்துவ சோதனை பற்றி ஒரு சந்தேகம்.
ஹைமன் என்று சொல்லப்படும் சவ்வு கிழிந்திருந்தால் கன்னி இல்லை என்று கருதப்படுகிறது.

இந்த சவ்வு உடலுறவு இல்லாத வேறு காரணங்களாலும் கி்ழிய வாய்ப்பிருக்கிறது.அது போல உடலுறவின் காரணமாக இச்சவ்வு கிழிந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் புதிய சவ்வு பொருத்த முடியும் என்றும் சொல்லப் படுகிறது. எனவே ஒரு பெண் கன்னி்யா இல்லையா என்பதை அவளாலும்,அவள் கன்னியில்லாத பட்சத்தில் அவளைக் கன்னி கழித்தவனாலும் ,கடவுளாலும் மட்டுமே சொல்ல முடியும்.எனவே இந்தக் கன்னிமை என்பதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்த ஏலத்தில் அளிக்கப் பட்டிருக்கும் அதிகமான தொகைக்குக் காரணம்.ஒரு பெண் கன்னியா இல்லையா என்று கவலைப் படுபவர்கள் ஆணின் கன்னிமை பற்றிக் கவலைப் படுவதே இல்லை.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி)

2 கருத்துகள்:

  1. //“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி) //

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
    சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


    உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
    உழவன்

    பதிலளிநீக்கு
  2. @உழவன்
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
    உங்கள் பதிவுக்குச் சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு