தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 18, 2008

ஜெயகாந்தனும்,தி.மு.க.வும்

அறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,ஆனந்தவிகடனில் வாரம் ஒரு முத்திரைக் கதை வரத்தொடங்கியது.அதிகமான முத்திரைக் கதைகள் எழுதி என்னை வெகுவாகக் கவர்ந்தவர் ஜெயகாந்தன்.யுகசந்தி,கிழக்கும் மேற்கும்,போன்ற பல அற்புதமான கதைகளை எழுதினார்.ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்த அவர் பின் காங்கிரஸ்காரராக மாறினார்.பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப் படும் அளவுக்கு பொறிபறக்கப் பேசுவார்.பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் நாளிதழான "ஜெயபேரிகை"என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
அன்னாட்களில் தி.மு.க.வை மிகக் கடுமையாக விமரிசித்து வந்தார்.அவர் கம்யூனில் இருந்து பொதுவுடமை பற்றி நன்கு அறிந்திருந்தார்.ஒரு முறை அவர் எழுதினார்-அதன் சாரம்சமாவது.--உலகில் இரண்டு வர்க்கங்கள் உள்ளன-முதலாளி வர்க்கம்(பூர்ஷ்வா),தொழிலாளி வர்க்கம்(ப்ராலிடேரியெட்).இதைத் தவிர இரண்டிலும் உள்ள தீமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புதிய வர்க்கம் உருவாகிறது-லும்பன் ப்ராலிடேரியெட் என்று;தமிழில் இதைப் பொறுக்கி வர்க்கம் என்று அழைக்கலாம். தி.மு.க.வின் பின்னணி இதுதான்-----இது ஜெயகாந்தன் எழுதியது.

ஒரு முறை,தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது,கட்சித் தகறாரில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.காலை இழந்தார்.அது பற்றி ஜெயபேரிகையில் எழுதிய ஜெயகாந்தன் தி.மு.க.ஆட்சியாளர்கள் பற்றி இவ்வாறு எழுதினார்---
“நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டிப் பிணம் தின்னும் கழுகுக்கூட்டமே,கழக அரசே”----இது ஜெயகாந்தன் எழுதியது.
இவ்வாறு தி.மு.க.வைக் கடுமையாக விமரிசித்து வந்தவர் ஜெயகாந்தன்.
இப்போது??
காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக