தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 12, 2008

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்

இது நேற்றே எழுதியிருக்க வேண்டிய பதிவு.ஒரு நாள் தாமதமாகி விட்டது.கீழே உள்ள பாரதியின் பாடலைப் பாருங்கள்---

"முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்- ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்."

எனக்கு எழுந்த கேள்விகள்-
1)ஐயரெல்லாம் வேதம் ஓதினால் மட்டும் மாதம் மூன்று மழை பெய்யுமா?பாரதி அவ்வாறு நம்பினாரா?

2)சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடிய புதுமை கவிஞன்,ஒரு சாதியைக் கேவலப்படுத்துவது போல் பாடலாமா?சாதீயத்தைச் சாடுவது என்பது வேறல்லவா?

3)இது மறவன் பாட்டு என்ற தலைப்பில் வருகிறது,எனவே இது பாரதியின் கருத்தல்ல,ஒரு "மண் வெட்டிக் கூலி தின்னும்" மறவனின் கருத்து எனக் கொள்ள முடியுமா?கவிஞனின் உள்ளம்தானே வேறொருவர் மூலம் வெளிப் படுகிறது?.

4) இன்னொரு இடத்தில் பாரதி சொல்கிறார்"வேதமறிந்தவன் பார்ப்பான்,பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்".எனவே வேதம் ஒதுவதை விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் எழுந்த வரிகளா?(ஆதி சங்கரர் தனது 'சாதனா பஞ்சகத்'தில் "தினமும் வேதத்தை ஓத வேண்டும்" என்று சொல்கிறார்.இது பற்றி என் நண்பர் மதுரை சொக்கன் அவர்களை அவரது பதிவில் எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.)

நான் பாரதியின் ரசிகன்.என் பள்ளி நாட்களிலிருந்தே பாரதியால் ஈர்க்கப் பட்டவன்.என்னிடமிருக்கும் "பாரதியார் கவிதைகள்" என்ற ஸ்ரீமகள் கம்பெனி யின் 1956 ஆம் ஆண்டுப் பதிப்பு(விலை ரூ.6/=) அட்டை கிழிந்து நைந்து போயிருக்கிறது.

பாரதியின் பிறந்த நாளையொட்டி இதை ஒரு கருத்தரங்கமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். என் பதிவுக்கு வருகை தரும் சிலர் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக