இதில் ஐந்து வரிகள் இருக்க வேண்டும் ஒன்று இரண்டு கடைசி வரிகளிலும்,மூன்று நான்கு வரிகளிலும் கடைசிச் சொல்லில் ஒலியியைபு இருக்க வேண்டும்.
இன்னொரு முக்கிய இலக்கணம் அவை சிறிது அசிங்கமாகவும்,அபத்தமாகவும் ஆனால் நகைச்சுவையாகவும் இருக்க வேண்டும்.
லிமெரிக்கில் முக்கியமே அந்த நகைச்சுவைதான்.
தமிழில் இது போன்ற கவிதைகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.
நான் அவ்வப்போது என் பதிவில் லிமெரிக் எழுத முனைந்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.
இதில் நிரூபன் எங்கே வந்தார்....!
சொல்கிறேன்.
எனது லிமெரிக்குக்கு “சிந்துகவி “ன்ற அழகிய பெயர் சூட்டியவர் அவர்தான்.
இதோ லிமெரிக்குகள்.......
1)”பாருக்குப் போனான்
சுகுமார்
குடிக்க நினைத்தான் கொஞ்சம் பீர்
வந்தது பீர் இரண்டு பிட்சர்
கூடவே கொறிக்கக் கொஞ்சம் மிக்சர்
பின்னாலே நடந்தது ஒரே ரப்சர்!”
2)””கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு
கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு
ராதா கிட்ட சொன்னான் ஆசை
கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை
இப்போ செய்வதில்லை அவன் ஓசை!”
3)சங்கரன் சின்ன மகள் சக்கு
பார்த்தாலே ஏறும் கிக்கு
பார்த்து மயங்கினான் மாது
விட்டான் தங்கையைத் தூது
இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!
பார்த்தாலே ஏறும் கிக்கு
பார்த்து மயங்கினான் மாது
விட்டான் தங்கையைத் தூது
இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!
4)”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு
ரங்குவுக்கு
ஏறிச்சு ஒரே கிக்கு
போனான்
உடனே அவ வீடு
தங்கினான்
சில நாள் அவளோடு
இப்ப
அவன் கையில் திருவோடு!
5)“பக்கத்து வீட்டு வாசி
ராமன்
பார்ப்பதற்கு அவன் காமன்
மணந்தான் அழகு மங்கை
இணைப்பாய் அவள் தங்கை
கேட்கிறார் தத்தம் பங்கை!”
பார்ப்பதற்கு அவன் காமன்
மணந்தான் அழகு மங்கை
இணைப்பாய் அவள் தங்கை
கேட்கிறார் தத்தம் பங்கை!”
இந்த லிமெரிக்குகளில் இலக்கணத்தை நான் மீறியிருக்கிறேன்
கடைசிச் சொற்களின் ஒலியியைபு AABBA என்று வர வேண்டும்
ஆனால் நான் AABBB என்று மாற்றியிருக்கிறேன்!
உதாரணத்துக்கு முதல் லிமெரிக்கின் கடைசி வரி”பின்னால் நடந்தது பெரும் போர்” என்று இருக்கலாம்..
என்ன ஒரு லிமெரிக்குக்குப் போய் இவ்வளவு விளக்கமா என்கிறீர்களா ?!
:) :) :)