தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 24, 2014

வாக்களிப்பதால் வரும் நன்மைகள்!



எனது சனநாயக உரிமையை நிலைநாட்டி,கடமையை நிறைவேற்றி விட்டேன்.

சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!

காலை மணி 9.25.ஒட்டுப்போட்டு விட்டு வரலாம் என முடிவெடுத்தேன்; புறப்பட்டேன். 

எதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்கூட்டம் எப்படி?”
பதில் நம்ம பூத்தில் கூட்டமில்லை

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

ஹாலிடே,ஜாலிடே!



ஒருவன் மது அருந்தகத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான்,

அருகில் அமர்ந்திருந்த ஒருவனின் செய்கை விசித்திரமாகப் பட்டது.

அந்த மனிதன் ஒரு பெக் பிராந்தி குடித்து விட்டுத் தொடர்ந்து ஒரு கோப்பை பீர் அருந்தி  விட்டுப் பின் தன் சட்டைப்பைக்குள் பார்ப்பான்.

இவ்வாறே அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

இவன் பொறுக்க முடியாமல் அவனைக் கேட்டான்”ஏன் இவ்வாறு செய்கிறாய்”

அவன் சொன்னான்”சட்டைப்பைக்குள் என் மனைவியின் புகைப்படம் இருக்கிறது,எப்போது அவள் அழகாக இருக்கிறாள் என்று தோன்றுகிறதோ அப்போது போதை ஏறி விட்டது என்று பொருள்..குடிப்பதை நிறுத்தி விடுவேன்!”

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

தேர்தல் பிரசாரமும் வாக்குப்பதிவும்!



ஒரு அரசியல்வாதி  விபத்தில் இறந்த பின் அவர் உயிர் மேலுலகம் சென்றது.

அங்கு வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.

தேவதை சொன்னது”நீங்கள் மிகப் பிரபலமானவர்.எனவே எங்கு செல்வது-சொர்க்கமா, நரகமா-எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள் இருந்து தாங்கள் முடிவு செய்யலாம்”

தலைவர் சொன்னார்”பார்க்கவே வேண்டாம்.நான் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன்”

வியாழன், ஏப்ரல் 17, 2014

தேவலோக மயிலை!



நான் சென்னை மயிலை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த காலத்தில், மயிலையை ஒரு தேவ லோகம் என்றே நான் சொல்லி வந்தேன்.

காரணங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன்.

புதன், ஏப்ரல் 16, 2014

பதிவர் சந்திப்பும்,ஆப்பிள் பஜ்ஜியும்!



சென்னையின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்ட ,இன்று இல்லாமற்போய் விட்ட சில இடங்கள் பற்றி இன்று” இந்தியாவின் நேரங்கள்”நாளிதழில் ஒரு குறிப்பு படித்தேன்.அதில் சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று “உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்”.என் கல்லூரி வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகள் முன் வரையான காலத்தைப் பற்றிய  பல இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இடம்.

சனி, ஏப்ரல் 12, 2014

உடன்பிறப்பே! இன்று உங்கள் தினம்!



உடன் பிறப்பே!

இன்று உங்கள் நாள்! 

ஆம்.இன்று உடன் பிறப்புகள் தினமாம்.

அண்ணா,தம்பி,அக்கா.தங்கை என்ற உறவுகள் அனைவருக்கும் வாய்த்திடுவதில்லை.