தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 12, 2013

உங்கள் ஆயுதம் கூராக இருக்கட்டும்!



ஒரு மரத் தொழிற்சாலை.

மின்சார,ராட்சதப் பொறிகள் வராத காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ராமு நீண்டநாட்களாக அங்கு மரம் வெட்டும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்தான் சோமு அங்கு வேலைக்குச் சேர்ந்தான்.

ஆனால் விரைவில்  அதிக சம்பளம் ,முதலாளியின் பாராட்டு எல்லாம் அவனுக்குக் கிடைத்தது .

ராமு முதலாளியிடம் சென்று ஏன் எனக் கேட்டான்.

அவர் சொன்னார்”சோமு நீ வேலை செய்யும் நேரம்தான் வேலை செய்கிறான்; ஆனால் அதிக மரங்களை வெட்டுகிறான்.எனவே அதற்குச் சரியான சம்பளம் பெறுகிறான்.”

ராமு சோமுவிடம் சென்று இது எவ்வாறு சாத்தியமாகிறது எனக்கேட்டான்.

சோமு சொன்னான்”ஒரு மரத்தை வெட்டியவுடன் நான் என் கோடரியைத் தீட்டிக் கூர் செய்து கொள்வேன்;அதனால் ஒவ்வொரு மரத்தையும் விரைவாக வெட்ட முடிகிறது;அதிக மரங்கள் வெட்டுகிறேன்”

ஆம்!

பணியில் முன்னேற இது ஒரு சிறந்த அறிவுரை.

நேற்று வந்தவன் என்னைத் தாண்டிச் சென்று விட்டானே எனப் பொருமுவதில் என்ன பயன்?

எப்போதும் உங்கள் ஆயுதைக் கூராக வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் பணியில் ஏற்படும் தினசரி மாற்றங்கள்,புதிய தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளுங்கள்.செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வராமல்,புதிய பாதைகளை நாடுங்கள்.

உங்கள் தொழிலுக்கான ஆயுதம் கத்தி என்றால் அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்

உங்கள் தொழிலுக்கான ஆயுதம் புத்தி என்றால் அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்

பணியில் முன்னேறுங்கள்!



36 கருத்துகள்:

  1. ஆஹா..அருமையான தத்துவக்கதை.நினைவில் கொள்ளவேண்டியதும் கூட.வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  2. கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியத் தீட்டுன்னு கவிஞர் சொன்னாரு... நீங்க தொழில் திறமைங்கற ஆயுதத்தையும் கூர் தீட்டிக்கச் சொல்றீங்க. சூப்பர் தல!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Love-Special.html

    பதிலளிநீக்கு
  4. //நேற்று வந்தவன் என்னைத் தாண்டிச் சென்று விட்டானே எனப் பொருமுவதில் என்ன பயன்?//
    இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே?

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பணியில் ஏற்படும் தினசரி மாற்றங்கள்,புதிய தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளுங்கள்.செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வராமல்,புதிய பாதைகளை நாடுங்கள்.

    சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வாய்க்க தத்துவத்த எவ்ளோ ஜிம்பிலா புர்யவச்டே வாத்யாரே!
    சூப்பர்பா!!

    பதிலளிநீக்கு
  7. \\ உங்கள் பணியில் ஏற்படும் தினசரி மாற்றங்கள்,புதிய தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளுங்கள்.செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வராமல்,புதிய பாதைகளை நாடுங்கள்.//

    உண்மை, நல்ல அறிவுரைகள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்து. சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான அறிவுரை! குட்டிக்கதை மூலம் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு