தொடரும் தோழர்கள்

சனி, மே 31, 2014

வலைப்பதிவுப் பணி அவுட்சோர்ஸிங்!!


ப்ளஸ்ஸில் இரு நாட்களுக்கு முன் வலைப்பதிவுப் பக்கமே நான் வருவதில்லை என்று நானே வருத்தப்பட்டு எழுதியிருந்தேன்!(வேறு யார் வருத்தப்படப் போகிறார்கள்?!)

அப்போதுதான் அதற்கான சரியான தீர்வு பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியது நினைவுக்கு வந்தது!

இதோ அந்த இடுகை!

************

//சில நாட்களாக ஒரு எண்ணம்!

பதிவு வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தால் என்ன?!(outsourcing)

நானும் பதிவே கதி என்று இருக்கக் கூடாது,பதிவும் நல்ல விதமாகத்தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால்,அவுட்சோர்சிங் தான் சிறந்த வழி எனத் தோன்றுகிறது!

எனவே இந்தப் பதிவின் மூலம் இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறேன்!

விண்ணப்பிவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள்-

1)தமிழ் நன்கு எழுதப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!

2)நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றிலிருந்து பதிவுக்கான செய்தியை உள்வாங்கிக் கொள்ளும் திறன்.

3)பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான விஷயங்களை வெட்டி ஒட்டிப் பதிவு எழுதும் திறமை!

4)மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

5)திரைப்படப் பாடல்கள் பற்றிய அறிவு,நடிகர்கள் பற்றிக் கிசு கிசுக்கள் தெரிந்துகொள்ளுதல்,திரைப்படம் பார்க்காமலே கூட விமரிசிக்கும் திறமை,இவையெல்லாம் அவசியம்!

6)பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள்,வருகைகள்,திரட்டிகளில் வாக்குகள் வரவழைப்பதற்காக,பல பதிவுகளைத் தொடர்தல்,வாக்களித்தல், பின்னூட்டமிடுதல் ஆகியவை திறம்படச் செய்தல்!முக்கியமாக டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இடுதல்!
கீழ்க்கண்டவை வேலை முறைமைகள்---

1)ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.பணியின் தரத்தைப் பொறுத்து வேலை நீட்டிப்பது அமையும்.

2)குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!

3) ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.

4)ஒரு மாதத்துக்கான சராசரி வருகைகள்(ஹிட்ஸ்),குறைந்த பட்சம் 6000 இருக்க வேண்டும்!

5)இந்த வலைப் பதிவின் தரத்தைக்(அப்படியொன்று இருக்கிறதா?!) குறைக்கும் படியான இடுகைகள் வெளி வரக் கூடாது!

6)சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஒப்பந்த ஊதியம்விவரங்கள்—

1)முறைமைகள் வழுவாமல் செயல் படும் பட்சத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மயிலை, கையேந்தி பவனில்,இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் படும்!
(யாரப்பா அங்கே முணு முணுக்கறது,ஞாயிறு கையேந்தி பவன் லீவு என்று)

2)வருகைகள் 6000த்துக்கு மேற்படும் மாதங்களில் ஊக்க போனஸாக,ஒரு ஞாயிறன்று, மயிலை சங்கீதா/சரவணபவன்/கற்பகாம்பாள் மெஸ் எங்காவது,இரவு டிஃபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்!

3)தமிழ் மணம் ராங்கில் 100க்குள் வந்தால்,பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்! அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!//
******************

நல்ல ஐடியாதானே?

32 கருத்துகள்:

  1. 2011தமிழ் மணத்தில் மூன்றாவது இடத்தில் வந்த ரகசியம் இப்போதானே தெரியுது !))))
    அது இருக்கட்டும் ,இன்னுமா எவனும் வந்து மாட்டலே?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. 2011 இல் சொன்னதை இப்போதும் சொல்கிறேன். வேடிக்கையாக எழுதுவதே உங்கள் வாடிக்கை!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    சிந்தனை துளிகள்.........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சூப்பரோ சூப்பர்..! இந்த ஐடியா இல்லாமல் போனவர்கள்.. அய்யா சென்னை பித்தனின் வழிமுறைகளை காப்பி அடிக்காமல் முன்னுரையாக கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  5. என்க்கு டேமில் ரெம்ப நல்ளா எலுத பாடிக்க தெறியும். எண்ண இண்த வேலக்கு செத்துக்குவீங்களா..........? பிலீஸ்..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கலுக்கு நள்ள திரமை இருக்குது,வேளை உங்கலுக்குத்தான்!
      நன்றி

      நீக்கு
  6. என் உள்ளத்தைத் திருடிச் செல்லும் லொள்ளுத் தாத்தாவுக்கு வாற
    ஐடியா போல வேற யாருக்குத் தான் இந்த ஐடியா எல்லாம் வரும் சொல்லுங்கள்? :)))))))))))

    பதிலளிநீக்கு
  7. ஐ ஸ்பீக்&ரைட் இன் தமிழ் லாங்குவேஜ்.கான் ஐ ஜாயின் வித் யூ?

    பதிலளிநீக்கு
  8. நல்ல யோசனை! ஆனால் இது அவுட்சோர்சிங்கிற்கு சொன்ன நிபந்தனைகள் மாதிரி தெரியவில்லை. வலைப்பதிவில் பிரபலமாக பலரும் செய்யும் தில்லாலங்கடி சாமர்த்தியங்களைச் சொல்வது போல இருக்கிறது.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  9. சூப்பரான ஐடியா! நீங்கள் அமெரிக்காவில் பிறந்திருக்கவேண்டியர் ஐயா! -இராய செல்லப்பா (சான் டியாகோவிலிருந்து.)

    பதிலளிநீக்கு
  10. செம ஐடியா.... உடனடியா இதே விண்ணப்பம் என்னுடைய பக்கத்திலும் போட வேண்டிய நிலை எனக்கு!...:)

    பதிலளிநீக்கு
  11. அருமையான யோசனைதான் ஐயா !

    சுண்டல் பொட்டலத்தில் மாங்காய் சீவல் இருக்கும்தானே ?!!!

    சீரியஸ் செய்தி : மேலைநாடுகளில் இது உண்மையிலேயே நடக்கிறது ! ஆனால் சம்பளத்துக்காக அல்ல, புதிய வலைப்பதிவாளார்கள் விளம்பரத்துக்காக மற்ற வலைப்புக்களில் எழுதுவது உண்டு !

    எனது புதிய பதிவு : முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  12. அருமையான யோசனைதான் ஐயா !

    சுண்டல் பொட்டலத்தில் மாங்காய் சீவல் இருக்கும்தானே ?!!!

    சீரியஸ் செய்தி : மேலைநாடுகளில் இது உண்மையிலேயே நடக்கிறது ! ஆனால் சம்பளத்துக்காக அல்ல, புதிய வலைப்பதிவாளார்கள் விளம்பரத்துக்காக மற்ற வலைப்புக்களில் எழுதுவது உண்டு !

    எனது புதிய பதிவு : முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  13. :)) ,கண்டிப்பா நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் சம்மதம் என்று சொன்னதே போதும் எங்கள் அன்புத் தாத்தாவின் அழகிய பகிர்வைக் காண ஆவலோடு காத்திருப்போம் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன் :)நன்றி தாத்தா .

    பதிலளிநீக்கு
  14. அடடா தமிழ் மணத்தில் ஒரு குத்துக் குத்த மறந்து விட்டீர்களே என் செல்லத் தாத்து
    குடு குடுவென ஓடிப் போய்க் குத்தி விட்டு வாருங்கள் பிளீஸ் :))

    பதிலளிநீக்கு