ஒரு மரத் தொழிற்சாலை.
மின்சார,ராட்சதப் பொறிகள் வராத காலம் என்று
வைத்துக் கொள்ளுங்களேன்.
ராமு நீண்டநாட்களாக அங்கு மரம் வெட்டும்
வேலை செய்து வந்தான்.
அவனுக்குப் பின்தான்
சோமு அங்கு வேலைக்குச் சேர்ந்தான்.
ஆனால் விரைவில் அதிக சம்பளம் ,முதலாளியின் பாராட்டு எல்லாம் அவனுக்குக்
கிடைத்தது .
ராமு முதலாளியிடம் சென்று ஏன் எனக் கேட்டான்.
அவர் சொன்னார்”சோமு நீ வேலை செய்யும் நேரம்தான்
வேலை செய்கிறான்; ஆனால் அதிக மரங்களை வெட்டுகிறான்.எனவே அதற்குச் சரியான சம்பளம் பெறுகிறான்.”
ராமு சோமுவிடம் சென்று இது எவ்வாறு சாத்தியமாகிறது
எனக்கேட்டான்.
சோமு சொன்னான்”ஒரு மரத்தை வெட்டியவுடன் நான்
என் கோடரியைத் தீட்டிக் கூர் செய்து கொள்வேன்;அதனால் ஒவ்வொரு மரத்தையும்
விரைவாக வெட்ட முடிகிறது;அதிக மரங்கள் வெட்டுகிறேன்”
ஆம்!
பணியில் முன்னேற இது ஒரு சிறந்த அறிவுரை.
நேற்று வந்தவன் என்னைத் தாண்டிச் சென்று
விட்டானே எனப் பொருமுவதில் என்ன பயன்?
எப்போதும் உங்கள் ஆயுததைக்
கூராக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் பணியில் ஏற்படும் தினசரி மாற்றங்கள்,புதிய
தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது உள்வாங்கிக்
கொள்ளுங்கள்.செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வராமல்,புதிய பாதைகளை நாடுங்கள்.
உங்கள் தொழிலுக்கான ஆயுதம் கத்தி என்றால்
அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்
உங்கள் தொழிலுக்கான ஆயுதம் புத்தி
என்றால் அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்
பணியில் முன்னேறுங்கள்!