தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 07, 2015

பேஷ்.பேஷ்!ரொம்ப நன்னாருக்கு!




என்.எஸ்.கிருஷ்ணனிடம் காபி வேண்டுமா என்று கேட்டபோது (டீயே), டி.ஏமதுரம்  என்று சொல்ல அவருக்கு அதன் பிறகு காபி கிடைக்கவில்லைஎன்பது  பழைய ஜோக்.

நமது கிருஷ்ணன் ஜோக்கடித்து காப்பியை இழந்தவரல்ல. அவருக்குஏற்பட்ட  அனுபவம் என்ன என்பதை பார்த்துவிட்டு அதை வகைப்படுத்தலாம்.


அவருக்கு தினமும் இரண்டு காபிகள் அத்யாவசியம். காலை பல் தேய்தவுடன் ஒன்று. சுமார் 6.30 மணிக்கு சாருக்கு புதுப் பாலில் போட்டபில்டர் காபி தான் பிடிக்கும். இரண்டாவது காபி மாலை 03.30 மணிக்கு. சர்வீஸில் இருந்த போது ஆபிசிலே இவருக்கும் இவரைப் போன்ற இன்னும் சிலருக்கும் பிரத்யேக ஏற்பாடுகள் மூலம் காபி கிடைத்து விடும்.


அப்போது கிருஷ்ணனுக்கு வயது 46. கர்நாடகாவின் ஒரு சின்ன டவுனில் வேலைபார்த்து வந்தார். ஒரு பெரிய நிறுவனத்தின் ரீஜனல் ஆபீசில் படிப்படியாக முன்னேறிக் கொண்டி
ருந்தார். வேலையை சற்று திறம்பட செய்ததால், பொறுப்புள்ள வேலைகள் அவரிடம் ஒப்படைக்ப்பட்டன.

அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களில் 10 தமிழ் குடும்பங்கள் அந்த ஊரில் இருந்தன. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் குடும்பங்கள் ஒற்றுமையாக, அளவாக பழகின. தமிழ் வார பத்திரிக்கை சங்கம், பிக்னிக், புதுவருட இரவு டின்னர் போன்ற கொண்டாட்
டங்களுக்கு கிருஷ்ணன் அச்சாணியாக இருந்தார். வாரப் பத்திரிக்கை பட்டுவாடாக்களை பேதமின்றி செய்தார்.

மற்றுமொரு 15 ஊழியர்கள் சென்னை, மும்பை, பெங்களூர்களில் குடும்பத்தை விட்டு விட்டு தனியாக வசிப்பவர்கள். குடியிருப்பு வசதிகளை நிறுவனமே வழங்கியது.

தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு மாறுதல் கேட்டு பெற்றுச் செல்லும் நிர்பந்தம் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. கிருஷ்ணனின் மாற்றம் எல்லோரையும் சிறிது வருத்தத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக வார ஏடுகள் சங்கத்தின் மூலம் தொடர்கதை வாசிப்பவர்களின் வருத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.மே30 ஆம் தேதி சென்னை செல்ல ரயிலில் புக் பண்ணியிருந்தார். ஒரு வாரமாக லஞ்ச், இரவு சாப்பாடு வீட்டில் இல்லை.ராமசாமி என்ற மேல்மட்ட அதிகாரி தமிழ் வாரப்பத்திரிக்கை சங்கத்தின் அங்கத்தினர் கடைசியாக எல்லா பத்திரிக்கைகளையும் வாங்கிக் கொள்வார்.
 திருப்பித் தந்ததில்லை. உறுப்பினர் சந்தாவை பழைய பேப்பர்காரனிடம் சம்பாதித்து விடுவார் என்று அவரது கருமித்தனத்தைப் பற்றி அறிந்தவர்கள் பரிகாசிப்பார்கள்.மே30 திங்கட்கிழமை சனியன்று கிருஷ்ணனுக்கு  அந்த ஆபீசில் கடைசி நாள்.

வியாழனன்று தன்னிடமிருநத மீதி வார இதழ்களை ராமசாமியிடம்ஒப்படைத்து விட்டு திங்களன்று சென்னை செல்வதாக விடைபெற்றார்.

ராமசாமியின் குடும்பத்தினர் வெள்ளியன்று சென்னையிலிருந்து வருவதாக கிருஷ்ணனிடம் கூறினார். பெண்ணை சென்னையில் வித்யோதயா பள்ளியில் சேர்க்கப்போவதாக கிருஷ்ணன் சொன்னவுடன் தன் மகள் அந்தப்பள்ளியின் மாணவி என்று சொல்லி, அப்பள்ளி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள சனிக்கிழமை 3 மணிக்கு அவரை தன் வீட்டிற்கு அழைத்தார் ராமசாமி.

சனியன்று தன்பிரிவு ஊழியர்களின் பிரிவு உபசாரத்தை ஏற்றுக்கொண்டு சரியாக 3 மணிக்கு ஆபீஸின் சற்று தூரத்தில் இருந்த ராமசாமியின் வீட்டை அடைந்தார். பால்காரன் அப்போது கறந்த பாலை ஊற்றிவிட்டுச் சென்றான். காபி டிகாக்ஷன் மணம் தூக்கியது. சென்னையி லிருந்து கொண்டுவந்த பொடியாக இருக்கலாம்.ராமசாமி கிருஷ்ணனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதறாஸ் ஆபீஸ் கதை பேசினார். தன் பெண்ணைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கையை விட்டு எழுந்து உள்ளே போனார். கெட்டிக்காரப் பெண் வேண்டிய விவரங்களை ஒரு நொடியில் கொடுத்தாள்.

மணி 03.30 கிருஷ்ணனின் புலன்கள் சூடான மணமான டிக்காக்ஷன் காபியை எதிர்நோக்கி காத்திருந்தது. திரும்பி வந்த ராமசாமியிடம் உங்க பொண்ணுக்கு ரொம்ப நன்றி. போயிட்டு வரேன் சார். என்று புறப்பட்டார்.

காபியை மறந்துவிட்டாரோ என நினைத்தார். வாசல் கதவு வரை வழிஅனுப்பினார் ராமசாமி. காப்பி பற்றி கப்சிப்.........!

 (தொடரும்)


ஞாயிறு, செப்டம்பர் 06, 2015

விடுமுறை,சிரிமுறை!

வகுப்பறையில் இரு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆசிரியர் வந்து அவர்களைக் கண்டித்துக் காரணம் கேட்டார்.


அவர்கள் சொன்னார்கள்”சார் கீழே பத்து ரூபாய் கிடந்தது.அதை மிகப் பெரிய பொய்யனுக்குக் கொடுப்பதாகத்  தீர்மானித்தோம்.யார் அது என்பதில்தான் வாக்குவாதம்.”



ஆசிரியர் சொன்னார்”பொய்யா?சே?என்ன மோசமான எண்ணம் உங்களுக்கு?நான் உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை.”


மாணவர்கள் அந்தப் பணத்தை ஆசிரியருக்கே கொடுத்து விட்டனர்.

 

************

சனி, செப்டம்பர் 05, 2015

நல்லாசிரியர் யார்!

ஆசிரியர்கள் பலவிதம்

சிலர் வெறும் கற்றுச் சொல்லிகள்

சிலர் கற்பிப்பவர்கள்,பாடங்களை மட்டும்

சிலர் பாடங்களோடு நற்பண்புகளையும்  அளிப்பவர்கள்

சிலர் இவற்றோடு பொது அறிவையும்   விரிவு படுத்துபவர்கள்.

சிலர் அனைத்துக்கும் மேலாய்,மாணவ,மாணவிகளைத் தங்கள் பிள்ளைகளாய் வழி நடத்துபவர்கள்.

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

நன்கடன்! -- நிறைவுப்பகுதி



சோமு காந்தி நகர் கிரிக்கெட் சங்கத்தின் வாழ் நாள் அங்கத்தினர். காலையில் ஆறு மணியிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் தவறாமல் நடை பயிற்சி தினம்தோறும் மேற்கொள்வார். ஒரு முப்பதாயிரம் ரூபாய் அதிகமாக கொடுப்பதற்கு பட்டம்மாவின் தராதரத்தை காட்டி கடன் கொடுக்க இப்படி லொள்ளு பண்றீங்களேஎன்று மீனாட்சி கடிந்து கொண்டது அவரை சிறிது உறுத்தியது. 


ஆனால் தன் பிடியில் இருந்து தளர வங்கி தர்மம் அவரை அனுமதிக்கவில்லை.


தான் ஏதாவது வாராக்கடனை கொடுத்திருக்கிறோமா என யோசித்தார். அவரது மூளையின் “Byte” கள் நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு ஐநூறு ரூபாயை ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக அளித்ததாக அறிவுறுத்தியது. பொறி தட்டியது போல் ஒரு உணர்வு .ரூபாய் ஐநூறு சம்பந் தப்பட்ட எல்லா விவரங்களையும் மனத்திரையில் பளிச்சிட வைத்தது. 


1962ல் சத்தியமூர்த்தி என்பவர் பெங்களூரில் தனியார் குழுமத்தின் விற்பனை அதிகாரியாக இருந்தார். திறமைமிக்கவர். நம் சோமசுந்தரமும் அதே சமயத்தில் தான் அதிகாரியாக வங்கியில் பெங்களூர் கிளையில் பணியமர்ந்தார். சத்யாவும் சோமுவும் நெருங்கிய நண்பர்களாக ஆயினர். பார்த்த சினிமாக்கள், பெங்களூர் பாரில் குடித்த பீர்கள் ஏராளம். சத்யாவிற்கு 1964ல் கல்யாணம் ஆனது. 


மனைவியுடன் வாரக் கடைசியை கொண்டாட ரூபாய் ஐநூறு வேண்டுமென்று சத்யா சோமுவை அணுக, சோமு உடனே பர்ஸில் இருந்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அப்படியே கொடுத்தார். பிறகு ஒரு மாதத்தில் சத்யாவிற்கு ஏர் கெனடாவில் நல்ல வேலை கிடைக்க, அவர் மனைவியுடன் பறந்தார். அப்போது சோமு கல்யாணம் முடிந்து மீனாவுடன் தேனிலவு சென்றிருந்தார். சத்யாவின் கெனடா பயணம் சோமுவிற்கு கடிதம் மூலமாகத் தான் தெரிவிக்கப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்டதொடர்பு பின்னால் இணையவே இல்லை. வங்கியில் அனுபவமற்ற நிலையில் அப்போது உயிர் நண்பனுக் கான வழங்கப்பட்ட கடனை சிறிது நாளில் சோமு முமுவதும் மறந்தார். 


நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது பட்டம்மா அவரை பார்த்தும் பார்க்காதது போல் வேலையை முடித்து வெளியேறினாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு நாள், திடீரென்று சோமுவின் B.S.N.L. தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் ஒலித்த குரல் புதிதாக இருந்தது. சோமசுந்தரம் இருக்கிறாரா? என்றது. தன்னை சத்யமூர்த்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஐம்பது வருட சுக துக்கங்களை சோமுவிடம் பகிர்ந்து கொண்டது. மனத் தொடர்பு கிடைத்த சில நாட்களிலேயே நிஜத் தொடர்பும் கிடைத்தது. சோமுவை பிரமிக்க வைத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்து பென்ஷன் சங்கத்தின் மூலம் சோமுவின் தொலைபேசி மற்றும் விலாசத்தை பெற்றதாக சத்யா கூறினார். பிறகு சோமு நான் ஒன்று சொன்னால் மறுக்காமல் கேட்பாயா?” என்றார் சத்யா. ஒ ஸ்யூர் சோமு பதிலளித்தார். என் கல்யாணம் ஆனவுடனே, வீக் எண்டை கொண்டாட ரூபாய் ஐநூறு உங்கிட்ட கைமாத்த வாங்கினேன்” 

ஞாபகம் இருக்கா.

அதுக்கென்ன இப்ப. 

அதை எப்படியாவது திருப்பித் தரணும்னு திட்டவட்டமா இருந்தேன். பிறகு உன்னை கண்டுபிடிக்கவே முடியல. அதை ஒரு வைப்புக் கணக்கில போட்டு ஐம்பது வருஷமா கண்காணிச்சேன். ரூபாய் ஐநூறு ஐம்பது வருடங்கள்ல 41.397/- ஆக வளர்ந்து விட்டது. அந்த தொகைக்கு உன்னோட விலாசத்துக்கு காசோலை ஒண்ண நான் அனுப்பி யிருக்கேன். கண்டிப்பா அதை உன்னோட கணக்குல வரவு வை”.  என்று தொடர்பை துண்டித்தார் சத்யா. 

சோமு நிதான நிலைக்கு வரப் பல நிமிடங்கள் ஆனது. 



என்னமோ ஏதோ- சோமு ஐம்பது வருடத்திற்கு முன் கொடுத்த நன்கடன் பட்டம்மாவிற்கு நன்கொடையாக ஆனது. 

ஆனாலும் பட்டம்மாவின் கடன் எல்லை ரூபாய் 20,000/- அப்படியே தொடர்ந்தது.

(ஆக்கம்- நண்பர் பார்த்தசாரதி)

டிஸ்கி:திருமூலரின் சூனிய சம்பாஷணை பற்றி அறிய  விருப்பமா?


 இங்கே  பாருங்கள்


வியாழன், செப்டம்பர் 03, 2015

கடவுளுடன் ஒரு தாமி!(selfie)



இது ஒரு இடைச் செருகல்.

அதாவது,”நன்கடன்” முதல் பகுதிக்கும்,அடுத்த பகுதிக்கும் இடையே செருகப் பட்ட ஒரு இலேசான பதிவு!

கைபேசி எவ்வாறு நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகி விட்டது,நம் பண்பாட்டை எவ்வாறு பாதித்திருக்கிறது என்று நக்கலடிக்கும் பதிவு.

ஆங்கில மின்னஞ்சல் வருகையின் தமிழாக்கம்

ஐந்தாண்டுகளுக்கு முன் கோவிலுக்குச் சென்றேன்,எழுதி வைத்திருந்தார்கள்-- ”கோவிலுக்குள் கைபேசி எடுத்து வரக் கூடாது”


இரண்டாண்டுகளுக்குமுன் அறிவிப்பில் சிறு மாற்றம்-”கைபேசியை  அணைத்து   வைக்கவும்” (ஏற்கனவே நாம் எல்லோரும் கைபேசியை எப்போ தும் அணைத்தபடியேதான் இருக்கிறோம்!)


சென்ற ஆண்டு அறிவிப்பு மேலும் மாறியது”கைபேசியை ஓசை எழுப்பாத நிலையில் வைக்கவும்!”


ஆனால் நேற்றைய அறிவிப்போ............


”இறைவன் உருவின் அருகே நின்று ’தாமி’ எடுத்துக் கொள்ளக் கட்டணம் ரூ.100/=”


காலமாற்றம்!

புதன், செப்டம்பர் 02, 2015

நன்கடன்!



சோமசுந்தரம் இந்தியாவின் பெரிய வங்கியில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன் யு.எஸ்ஸில் இருப்பதால் மனைவி மீனாட்சி யுடன் அடையாறில் காந்தி நகரில் ஒரு தனிவீட்டில்75 வயதுக்கேற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வலியுடன் வாழ்ந்து வருகிறார். ஓய்வூதியம், சேமிப்புக் கள் ஈட்டுத் தரும் வட்டி, மாடிப்பகுதியின் வாடகை இந்த வரவு களை வைத்து கணிசமான மருத்துவ செலவு பெட்ரோல், இதர செலவுகளை திறம்பட சமாளித்து அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார். இரண்டு ஆண்டுக ளுக்கு  ஒரு முறை மனைவியுடன் யு.எஸ்  சென்று பேரப்பிள்ளைகளுடன் மூன்று மாதங்கள் குதூகலித்து வருவார்கள். வீட்டில் ஒரு அழகான தோட்டத்தையும் திறம்பட பராமரித்து வந்தார். 

செவ்வாய், செப்டம்பர் 01, 2015

ஏதோ வில்லங்கம் இருக்கு!



ஏதோ வில்லங்கம் இருக்கு!”

நமக்கு வில்லங்கம் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன?

சொத்து தொடர்பாக நாம் பதிவாளர் அலுவலகத்தில் வாங்கும் வில்லங்கச் சான்றிதழ்தான்!

அதாவது குறிப்பிட்ட சொத்தில் ஏற்கனவே ஏதாவது அடமானம் முதலிய சிக்கல்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் பெறப்படும் சான்றிதழ்

பொதுவாக வில்லங்கம் என்றால் என்ன?