தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 15, 2012

காதல்-திருக்குறள் கதை-பகுதி-3

அவன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தோளில் தட்டி விட்டுச் சென்ற இடம் இனித்தது. தோளில் எப்படி இனிக்கும் என்று யோசிக்காதீர்கள்!இது நாவின் சுவையல்ல;நெஞ்சின் சுவை.அதே சமயம் அவள் செல்வது நெஞ்சில் ஒரு சுகமான வலியாகப் பரவியது.ஒரு வாரம்!ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே நெஞ்சின் வலி கூடியது; ஆனால் அடுத்த ஞாயிறன்று அவளைக் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை உடல் முழுவதும் ஒரு பரவசமாய்ப்  பரவியது.ஒரே ஒரு பிரச்சினை.இந்த ஏழு நாட்கள் தொலைபேசக் கூடாது என்று அவள் கண்டிப்பாகச் சொல்லிச் சென்று விட்டாள்.கடவுளே!நாட்களை வேகமாக நகரச்செய் என்று வேண்டினான்.


அந்த ஞாயிறும் வந்தது.மறுநாள் அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து நினத்து முதள் நாள் இரவு நித்திரை போயிற்று. ஞாயிறு காலை எழுந்தது முதல் நிலை கொள்ளவில்லை


ஒரு லக்னோவி குர்த்தா பைஜாமா அணிந்தான்(போகும் இடம் ஒரு ஒவியக்கண்காட்சி அல்லவா?).’ஹ்யூகோ பாஸ்’ செண்ட் டைத் தெளித்துக் கொண்டான்.புறப்பட்டான்.தான் முதலில் சென்று அவளை வரவேற்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவள் முந்திக் கொண்டாள்.காலரியின் நுழை வாயிலிலேயே காத்திருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.ஒரு வாரப் பிரிவு முடிந்து இன்று பார்க்கும்போது எத்தனையோ பேச வேண்டும் என்ற எண்ணியதெல்லாம் அந்தக் கணத்திலே மறந்து போனது.கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தன. ஆயிரம் செய்திகள் பேசின.இதயங்கள் உருகி ஓடிச் சங்கமித்தன.அங்கு பேச்சா முக்கியம்?

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

(கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.)

அவள் கைகளை மெல்லப் பற்றினான்.என்ன மென்மை! இன்னும் பார்வைகள் விலகவில்லை.சுற்றுப்புறத்தை மறந்து ஒரு தனி உலகில் நின்றனர்.அவர்களை தாண்டிச் சென்ற சிலர் அவர்களப் பார்த்துச் சிரித்தவாறு சென்றனர்.


யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

(யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால்,அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.)

“இவள்தான்,இவள்தான் நான் தேடிக் கொண்டிருந்த என் துணை.இவளே என்னில் ஒரு பாதி.இவள் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை.இறைவா இவளை என்னிடம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி”—அவன் எண்ண ஒட்டம்.

”இவர்தான்.எந்த ஆடவனைப் பார்க்கும்போதும்,எந்த ஆடவோனோடு பேசும்போதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி இவரைப் பார்க்கும்போது என்னில் அலையலையாய்ப் பரவுகிறதே.இவரே என் துணை. இவரே இனி என் வாழ்க்கை;வாழ்க்கையின் பொருள்.”-அவள் எண்ண ஓட்டம்

கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.

இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.


அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா?


(இன்னும் வரும்)

18 கருத்துகள்:

  1. //அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா? // ஆமாம் அது தான் சரி....

    அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. காதலர்கள் உலகமே தனியானது, இனிமையானது. நாம் அடுத்த பகுதி வரும்வரை அவர்களைத் தனியாக விட்டுக் காத்திருப்போம் நண்பரே... சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. அவரவருக்கென்று ஓர் உலகம்
    அதில் காதலர்களுக்கென்று தனி உலகம்...

    அருமையா சொல்லி இருக்கீங்க ஐயா...

    பதிலளிநீக்கு
  4. இந்தக் குட்டிப்பையனுக்கு ஒரு சந்தேகம்.ஒரு காலத்தில் நீங்க ஆழமாகக் காதலித் தீர்களோ? அதெல்லாம்தான் வார்த்தையாகக் கொட்டுகிறதோ!
    ஹி,ஹி!

    பதிலளிநீக்கு
  5. //இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.//

    சரியாகச்சொன்னீர்கள். இனி அந்த இடத்தில் இருப்பது நாகரீகமல்ல. அவர்கள் தனியாய் இருக்கட்டும் கொஞ்ச நேரம் நீங்கள் சொன்னபடியே!

    பதிலளிநீக்கு
  6. கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.//
    அவர்களை விட்டு விட்டேன் நான் மாட்டிக்கொண்டேன் பழைய நினைவுகளில் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  7. //கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.

    இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.


    அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா? //

    OK OK

    பதிலளிநீக்கு
  8. குட்டன்1அனுபவமில்லாமலும் எழுத முடியும்!ஹி,ஹி
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சசிகலா கூறியது..
    //அவர்களை விட்டு விட்டேன் நான் மாட்டிக்கொண்டேன் பழைய நினைவுகளில் அருமை ஐயா.//
    :) வாழ்த்துகள் சகோ!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  11. வள்ளுவரின் காமத்துப் பாலை
    தனிமையில் குடித்துக் களிக்கும் தங்களை
    நானும் தனிமையில் விடுகிறேன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறீர்கள்...அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு